உலகக் கோப்பையிலிருந்து பாக். வெளியேற்றம்
கிங்ஸ்டன்:சுண்டைக்காய் அணியான அயர்லாந்திடம் படு கேவலமாக தோல்வியுற்று உலகக் கோப்பைப் போட்டியிலிருந்து வெளியேறியுள்ளது பாகிஸ்தான்.
உலகக் கோப்பைப் போட்டியில், தெற்காசிய கண்டத்திற்கு நேற்றைய தினம் கண்டம் போல. ஒரு போட்டியில் இந்தியா, வங்கதேசத்திடம்கேவலமாக தோற்றது. கிங்ஸ்டனில் நடந்த இன்னொரு போட்டியில், சுண்டைக்காய் அணியான அயர்லாந்து, பாகிஸ்தான் அணியை 3 விக்கெட்வித்தியாசத்தில் வீழ்த்தி உலகக் கோப்பைப் போட்டியிலிருந்தே வெளியேற்றி விட்டது.
முதல் முறையாக உலகக்கோப்பைப் போட்டியில் ஆடும் அயர்லாந்து அணி முதல் போட்டியில் ஜிம்பாப்வேயுடன் மோதியது. அந்தப் போட்டியைசிறப்பாக ஆடி டை செய்தது.
2வது போட்டியில், வலிமை வாய்ந்த அணியான, முன்னாள் சாம்பியன் பாகிஸ்தானை சந்தித்தது. யாரும் எதிர்பாராத வகையில் தங்களது சிறப்பானபந்து வீச்சால் பாகிஸ்தானை ரன் எடுக்க விடாமல் திணறடித்த அயர்லாந்தைப் பார்த்து நேற்று உலகமே வியந்து போயிருக்கும்.
படு சிறப்பாக பந்து வீசிய அயர்லாந்து, 132 ரன்களில் பாகிஸ்தானை ஆல் அவுட் ஆக்கியது. பின்னர் அயர்லாந்து ஆடியபோது மழை குறுக்கிட்டது.மழை நின்ற பிறகு விளையாடிய அயர்லாந்து அணிக்கு 128 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அந்த ரன்களை எளிதில்எடுத்து அபார வெற்றியைப் பெற்றது அயர்லாந்து.
![]() |
இந்த வெற்றியின் மூலம் அயர்லாந்து அணி சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெறக் கூடிய நிலையை நெருங்கி விட்டது. அதேசமயம், உலகக்கோப்பைப்போட்டியிலிருந்து பாகிஸ்தானையும் வெளியேற்றியுள்ளது.
முதல் போட்டியில் மேற்கு இந்தியத் தீவுகள் அணியிடமும், 2வது போட்டியில் அயர்லாந்து அணியிடமும் பாகிஸ்தான் தோல்வியைத் தழுவியுள்ளது.இதன் மூலம் உலகக் கோப்பைப் போட்டியில் பாகிஸ்தானுக்கு இனி வேலை இல்லை.
புள்ளிகள் அடிப்படையில், அயர்லாந்து பாகிஸ்தானை விட முன்னணியில் இருப்பதால், அந்த அணியே சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறுகிறது.













Click it and Unblock the Notifications