அடுத்த டார்கெட் இலங்கை: டிராவிட்
போர்ட் ஆப் ஸ்பெயின்:பெர்முடாவுக்கு எதிரான போட்டியை வெல்ல வேண்டும் என்று நினைத்து விளையாடினோம், வென்று விட்டோம். அடுத்து இலங்கை அணியையும்இதேபோல சிறப்பாக ஆடி வெல்வோம் என்று இந்திய அணியின் கேப்டன் ராகுல் டிராவிட் கூறியுள்ளார்.
பெர்முடாவுடனா பேட்டிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் டிராவிட் பேசுகையில், பெர்முடாவுடான போட்டியில் எங்கள் அணி சிறப்பாகவிளையாடியது. இந்த போட்டியில் நாங்கள் சிறப்பாக ஆட வேண்டும் என நினைத்தோம். அது நடந்து விட்டது.
அடுத்த போட்டியில் இலங்கையை எதிர்கொள்கிறோம். இந்தப் போட்டியிலும் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்று சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெறுவோம்.
வங்கதேச போட்டியில் ஏற்பட்ட தோல்வியால் எங்களுக்கு நெருக்கடி இருந்தது. அதை சமாளித்து இப்போட்டியில் சிறப்பாக வெல்ல வேண்டியஇக்கட்டான நிலையில் இருந்தோம். எங்களது வீரர்கள் ஒருங்கிணைந்து ஆடி அதை சிறப்பாக செய்து விட்டனர்.
குறிப்பாக வீரேந்திர ஷேவாக் தனது திறமையை நிரூபித்துள்ளார். எதிர்பார்த்ததை விட சிறப்பாக ஆடினார். நான் ஷேவாக்குக்கு ஆதரவாகஇருப்பதாக கூறுகிறார்கள், அது உண்மை அல்ல.
ஷேவாக் மிக சிறந்த வீரர். அவர் ஃபார்முக்குத் திரும்பி விட்டால் அணிக்கு மிக உதவியாக இருக்கும் என்பதால்தான் அவர் தேர்வு செய்யப்பட்டார்.தற்போது மீண்டும் ஃபார்முக்கு அவர் திரும்பியுள்ளார்.
வங்கதேச தோல்வியைத் தொடர்ந்து எங்களது கொடும்பாவிகளை ரசிகர்கள் எரித்துப் போராட்டம் நடத்தியதற்காக நாங்கள் வேதனைப்படவில்லைஎன்றார் டிராவிட்.












Click it and Unblock the Notifications