முலாயம் சிங்கை ஆதரித்து ஜெயலலிதா பிரசாரம்
டெல்லி: உத்திரப் பிரதேச சட்டசபைத் தேர்தலில் முலாயம் சிங்கை ஆதரித்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவும், தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவும் பிரசாரம் செய்யவுள்ளனர்.
உத்தரப் பிரதேச சட்டசபைக்கு வருகிற ஏப்ரல் மாதம் 7 கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. முதல் கட்ட ஓட்டுப் பதிவுக்கு மனுதாக்கல் முடிந்து விட்ட நிலையில் பிரசாரம் சூடு பிடிக்க ஆரம்பித்து விட்டது. காங்கிரசை ஆதரித்து அமேதி தொகுதி எம்பி ராகுல்காந்தி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
இந் நிலையில் முலாயம் சிங்கை ஆதரித்து ஜெயலலிதாவும், சந்திரபாபு நாயுடுவும் பிரசாரக் களத்தில் இறங்கவுள்ளனர். ஜெயலலிதாவும், சந்திரபாபு நாயுடுவும் பிரசார செய்யும் இடங்கள், நாள் போன்ற விவரங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
முலாயமின் வலது கரமான அரசியல்-கம்-தொழில்துறை புரோக்கர் அமர்சிங்குக்கும் ஜெயலலிதாவுக்கும் நெருக்கமான அரசியல் நட்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications