தமிழகத்தில் விரைவில் 5,000 போலீஸார் நியமனம்
வெேலூர்: தமிழகத்தில் உடனடியாக 5,000 போலீஸார் தேர்வு செய்யப்பட உள்ளதாக தமிழக காவல்துறை தலைவர் முகர்ஜி கூறியுள்ளார்.
வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய முகர்ஜி பேசுகையில்,
தமிழகத்தில் 98,000 போலீஸ் பணியிடங்கள் உள்ளன. இதில் 12,000 காலியிடங்கள் உள்ளன. இம் மாதம் 30ம் தேதி முதல் 736 எஸ்ஐகளை தேர்வு செய்ய தேர்வு நடக்கிறது. இதைத் தொடர்ந்து 5,000 போலீஸார் தேர்வு செய்யப்படவுள்ளனர். கருணை அடிப்படையில் வேலை கோரி 1,500 விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன. அதில் தேர்வு செய்யப்படுபவர்களை அமைச்சுப் பணிகளில் சேர்க்க அரசு உத்தரவிட்டுள்ளது.
அதேபோல், அவர்களில் சிலர் காவலர் பதவிக்குரிய தகுதியை பெற்றிருந்தால் அந்த பணியில் அமர்த்தப்படுவர். கடலூர் மாவட்ட கடற்கரை ஓரங்களில் 60 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மத்திய அரசு திட்டப்படி தமிழகத்தில் 12 கடலோர காவல் நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டு, சிலவற்றுக்கு கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது.
அதுமட்டுமில்லாமல், 12 புறக்காவல் நிலையங்களும், கூடுதலாக 40 சோதனைச் சாவடிகளும் அமைக்கப்படும். இதோடு சேர்த்து மொத்தம் 100 சோதனைச் சாவடிகள் உள்ளன. கடலோர பாதுகாப்பு பணிக்கு மத்திய அரசு 2 படகுகளை வழங்கவுள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications