ஈராக் முன்னாள் துணை அதிபர் தூக்கிலிடப்பட்டார்
பாக்தாத்:சதாம் உசேனின் ஆட்சிக்காலத்தில் துணை அதிபராக இருந்த தாஹா யாசின் ரமதான் இன்று காலை தூக்கிலிடப்பட்டார் என்று அவரது மகன்தெரிவித்துள்ளார்.
ஈராக் தனி நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி சதாம் உசேன் கடந்த டிசம்பர் மாதம் 30ம் தேதி தூக்கிலிட்டுக் கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட அவரது தம்பி மற்றும் முன்னாள் நீதிபதி ஆகியோருக்கு சமீபத்தில் தண்டனை நிறைவேற்றப்பட்டது.
![]() |
இவர்கள் தவிர முன்னாள் துணை அதிபர் ரமதானுக்கும் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. அந்தத் தண்டனையை அப்பீல் நீதிமன்றம் சமீபத்தில்உறுதி செய்தது.
இதையடுத்து அவர் எப்போது வேண்டுமானாலும் தூக்கிலிடப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் இன்று அதிகாலை ரமதான்தூக்கிலிட்டுக் கொல்லப்பட்டார்.
இதை ரமதானின் மகன் அகமத் ரமதான், அல் ஜஸீரா டிவிக்கு அளித்த பேட்டியில் உறுதிப்படுத்தினார். அவர் கூறுகையில், எனது தந்தையை ஈராக்அரசு கொன்று விட்டது. இது தண்டனை அல்ல, படுகொலை. எனது தந்தையின் உடல், சதாம் உசேன் உள்ளிட்ட மற்றவர்கள் அடக்கம் செய்யப்பட்டஇடத்திற்கு அருகேயே அடக்கம் செய்யப்படும் என்றார் அகமது ரமதான். அவர் தற்போது ஏமன் தலைநகர் சானாவில் தங்கியுள்ளார்.
துஜைல் நகரில் கடந்த 1980களில் 148 ஷியா முஸ்லீம்களைக் கொன்ற வழக்கில் ரமதானும் குற்றம் சாட்டப்பட்டிருந்தார். இதே வழக்கில்தான்சதாமுக்கும், மற்ற இருவருக்கும் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது நினைவிருக்கலாம்.
சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் ரமதான். 1956ம் ஆண்டு பாத் கட்சியில் இணைந்தார். 1968ம் ஆண்டு நடந்த புரட்சியில் சதாமுடன்இணைந்து பங்கேற்றார்.
கடந்த 2003ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மொசூல் நகரில் குர்திஷ் புரட்சிப் படையினர் ரமதானை சிறை பிடித்து அமெரிக்க படைகளிடம்ஒப்படைத்தனர்.
ரமதான் தூக்கிலிடப்பட்டது குறித்து ஈராக்கிய அதிகாரிகள் இதுவரை எந்தத் தகவலையும் வெளியிடவில்லை. இருப்பினும் இன்று ரமதான்தூக்கிலிடப்படுவார் என்று நேற்றே ரமதானின் வழக்கறிஞர்களுக்குத் தெரிவிக்கப்பட்டிருந்தது.













Click it and Unblock the Notifications