குடத்தை வீசி பைக் திருடர்களை அமுக்கிய பெண்

Subscribe to Oneindia Tamil

தக்கலை: தக்கலை அருகே மோட்டார் சைக்கிளில் வந்து செயின் பறித்த திருடர்களை, குடத்தை வீசி மடக்கினார் துணிச்சல்கார பெண் ஒருவர். இதையடுத்து அந்த திருடர்களை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

Jesinda
தூக்கி வீசிய குடத்துடன் ஜெசிந்தா


அதிகாலை திக்கணங்கோடு பகுதியை சேர்ந்த மோகனன் என்ற கவுன்சிலரின் மனைவி ஷீலா (35) வீட்டருகே உள்ள குடிநீர் பைப்பிலிருந்து தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் ஷீலாவின் கழுத்தில் கிடந்த நான்கு பவுன் செயினை பறித்துக் கொண்டு தப்ப முயன்றனர்.

Sheela
செயின் பறி கொடுத்த ஷீலா

ஷீலா கூச்சலிட்டதையடுத்து அவரது கணவரும் மற்றவர்களும் வேறு மோட்டார் சைக்கிள்களில் திருடர்களை துரத்திச் சென்றார். ஆனால், அவர்களை பிடித்த முடியவில்லை.

இச்சம்பவம் நடந்த சிறிது நேரத்தில் அதே திருடர்கள் பள்ளியாடி என்ற இடத்திலும் தங்கள் கைவரிசையை காண்பித்தனர். செல்வராஜ் என்பவரின் மனைவி லிண்டா ஜெசிந்தா (39) குழாயில் தண்ணீர் பிடித்துக் கொண்டு திரும்பியபோது அவர் கழுத்தில் இருந்த 6 பவுன் தங்க செயினை பறித்துக் கொண்டு திருடர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பினர்.

திருடர்கள் பயன்படுத்திய பைக்

அப்போது தன்னிடமிருந்த தண்ணீர் நிரம்பிய குடத்தை தூக்கி மோட்டார் சைக்கிள மீது வீசினார் ஜெசிந்தா. இதில் நிலை தடுமாறிய திருடர்கள் இருவரும் கீழே விழுந்தனர். தப்பியோடிய அவர்களை அப் பகுதி பொது மக்கள் விரட்டிப் பிடித்து தர்ம அடி தந்து போலீசில் ஒப்படைத்தனர்.

திருடர்களின் மோட்டார் சைக்கிளில் முன் புறம் கேரள பதிவு எண்ணும் பின் பக்கம் தமிழக பதிவு எண்ணும் இருந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+