பெங்களூர்-சென்னை ரயிலில் துப்பாக்கி முனையில் கொள்ளை

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்:பெங்களூரிலிருந்து சென்னை வந்த ரயிலில் துப்பாக்கி முனையில் பயணிகளிடம் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டது.

பெங்களூர் யஷ்வந்தபூர் ரயில் நிலையத்திலிருந்து சென்னை வழியாக குவஹாத்திக்கு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் நேற்றுநள்ளிரவு வழக்கம் போல சென்னைக்குக் கிளம்பியது.

பெங்களூர் அருகே கிருஷ்ணராஜபுரம், ஒயிட்பீல்டு ரயில் நிலையங்களுக்கு இடையே இந்த ரயில் சென்று கொண்டிருந்தபோது முன்பதிவுசெய்யப்படாத பெட்டியில் பயணித்த 6 பேர் துப்பாக்கி, கத்தியைக் காட்டி பயணிகளிடம் கொள்ளையில் இறங்கினர்.

ரூ. 1 லட்சம் மதிப்புள்ள நகை, பணத்தைப் பறித்துக் கொண்ட அக்கும்பல் ரயிலை அபாய சங்கிலியை பிடித்து இழுத்து நிறுத்தி தப்பியோடிவிட்டது.கொள்ளையர்கள் தாக்கியதில் ஒரு பெண் உள்பட 3 பேர் காயமடைந்தனர்.

வட மாநிலங்களில் நடப்பதைப் போல நடந்த இந்த கொள்ளைச் சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த துணிகர கொள்ளைச் சம்பவம்தொடர்பாக பெங்களூர் புறநகர்ப் பகுதிகளில் போலீஸார் தீவிர விசாரணை மற்றும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+