காவிரி: பிரதமருடன் தமிழக எம்பிக்கள் சந்திப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி:காவிரிப் பிரச்சினை தொடர்பாக சட்டப்பூர்வ நடவடிக்ககளை உடனடியாக மேற்கொள்ளுமாறு கோரி பிரதமர் மன்மோகன் சிங்கை தமிழகஎம்.பிக்கள் சந்தித்து மனு கொடுத்தனர்.

தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் தமிழகத்தைச் சேர்ந்த திமுக கூட்டணி எம்.பிக்கள், தமிழகத்தைச் சேர்ந்த மத்தியஅமைச்சர்கள் பிரதமர் மன்மோகன் சிங்கை இன்று சந்தித்தனர்.

இந்தக் குழுவில் அமைச்சர்கள் ப.சிதம்பரம், டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், அன்புமணி ராமதாஸ், அ.ராசா, ஜி.கே.வாசன், வேலு உள்ளிட்டோரும்,திமுக, பாமக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பிக்களும் இடம் பெற்றிருந்தனர்.

காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு தொடர்பாக சட்டப்பூர்வ நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு பிரதமரிடம் அப்போது மனு வழங்கப்பட்டது.

மேலும், சேலத்தில் ரயில்வே கோட்டம் அமைப்பதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டும் என கோரி மனு தரப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+