வெடிபொருட்களுடன் 3 நக்சலைட்டுகள் கைது
தஞ்சாவூர்:ஜெலட்டின் குச்சிகள், வெடிபொருட்கள் மற்றும் கத்திகளுடன் சென்ற தமிழ் மக்கள் இயக்கம் என்ற தடை செய்யப்பட்ட நக்சலைட் இயக்கத்தைச்சேர்ந்த 3 பேரை கியூ பிரிவு போலீஸார் கைது செய்தனர்.
பெரம்பலூர் மாவட்டம் பொன்பரப்பியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (48). இவரும் தியாகராஜன் என்பவரும், தமிழ்நாடு விடுதலைப் படை என்ற தடைசெய்யப்பட்ட நக்சலைட் அமைப்பிலிருந்து பிரிந்து, தமிழ் மக்கள் இயக்கம் என்ற அமைப்பை நடத்தி வருகின்றனர்.
இயக்கம் நடத்த போதிய பணம் இல்லாததால், மார்வாடிக் கடைகளில் கொள்ளையடிக்கத் திட்டமிட்டனர். இதற்காக கும்பகோணத்தை சேர்ந்தசக்திவேல் (27) என்பவரை கூட்ட சேர்த்துக் கொண்டனர்.
3 பேரும் சேர்ந்து கும்பகோணத்தில் உள்ள மார்வாடிடிகளின் அடகுக் கடைகளில் கொள்ளையடிக்க திட்டம் போட்டனர். இதை நிறைவேற்றவெடிபொருட்கள், ஜெலட்டின் குச்சிகள், வயர்கள் மற்றும் 2 பெரிய கத்திகளுடன் மோட்டர் சைக்கிளில் திருச்சியிலிருந்து புறப்பட்டனர்.
3 பேரும் வெடிபொருட்களுடன் தஞ்சைக்கு வருவது பற்றி தஞ்சை கியூ பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தஞ்சையில்கியூ பிரிவு போலீஸார் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
நேற்று பிற்பகலில் வந்த 3 பேரையும் மடக்கிப் பிடிக்க போலீஸார் வழி மறித்தனர். ஆனால் போலீஸாரை ஏமாற்றி விட்டுத் தப்பிச் செல்லமுயன்றபோது போலீஸார் 3 பேரையும் மடக்கிப் பிடித்தனர்.
அவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தியபோது, மார்வாடி கடைகளில் கொள்ளை அடிப்பதற்காக சென்றதை ஒப்புக் கொண்டனர். பின்னர்இவர்கள் மூவரையும் போலீஸார் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து வெடிபொருட்களையும், ஜெலட்டின் குச்சிகள், வயர், கத்திகள் போன்றவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
இவர்களிடம் நடத்திய விசாரணையில், சென்னை அருகே கூடுவாஞ்சேரியில் நடந்த ஒரு கொள்ளைச் சம்பவம் தொடர்பான வழக்கு, துப்பாக்கிவைத்திருந்த வழக்கு, வேப்பேரியில் பள்ளி பேருந்துக்கு குண்டு வைத்த வழக்கு, பெரம்பலூர் கடத்தல் வழக்கு போன்ற பல வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் என்பது தெரிய வந்தது.












Click it and Unblock the Notifications