கர்நாடகத்தின் சூழ்ச்சி: நெடுமாறன் எச்சரிக்கை
சென்னை:காவிரிப் பிரச்சினை தொடர்பாக கர்நாடகத்தின் சதி வலையில் தமிழக முதல்வர் கருணாநிதி சிக்கி விடக் கூடாது என்று தமிழர் தேசிய இயக்கத்தலைவர் பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், காவிரி நதிநீர் பிரச்சனை குறித்து தமிழக முதல்வரை சந்திக்க உள்ளதாக கர்நாடக முதல்வர்அறிவித்துள்ளார். இதற்கு முதல்வரும் சம்மதம் தெரிவித்ததாக கூறியுள்ளார்.
இதுபோல பேச்சுவார்த்தை என்ற பெயரில் காலம் கடத்தும் தந்திரத்திலும், புதிய அணைகள் கட்டுதல், பாசன பரப்பை விரிவாக்குதல் போன்றநடவடிக்கைகளிலும் கர்நாடகம் தொடர்ந்து ஈடுபட்டுள்ளது.
கர்நாடக முதலமைச்சரால் கூட்டப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டம் நடுவர் மன்றத் தீர்ப்பை முழுமையாக ஏற்க மறுத்து விட்டது. இந்த சூழ்நிலையில்பேச்சுவார்த்தை நடத்துவதால் எந்த பயனும் ஏற்படப் போவதில்லை.
கர்நாடகத்தின் சூழ்ச்சி வலையில் மீண்டும் சிக்க வேண்டாம் என தமிழக முதல்வரை வேண்டிக் கொள்கிறேன். பேச்சுவார்த்தை நடத்துவதாகஇருந்தால் அந்த கால கட்டம் வரை நடுவர் மன்றம் அளித்த இடைக்கால தீர்ப்பினை மதித்து நிறைவேற்ற வேண்டும் என்றும் இக்காலக் கட்டத்தில்தனது பாசன வசதிகளை விரிவாக்குவது இல்லை என்றும் கர்நாடகம் வாக்குறுதி அளித்தால் மட்டுமே அவர் பேச்சுவார்த்தைக்கு செல்லவேண்டும் என வேண்டிக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications