ரஷ்ய முதியோர் இல்லத்தில் தீ: 63 பேர் பலி
மாஸ்கோ:ரஷியாவில் முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 63 பேர் பரிதாபமாக பலியானார்கள். 33 பேர் படுகாயமடைந்தனர்.
ரஷியாவின், கிராஸ்நாடார் பிராந்தியத்தில் உள்ள, கமிஷெவத்ஸ்கயா என்ற கிராமத்தில் முதியோர்களுக்கான இல்லம் உள்ளது. இந்த இல்லத்தில்உள்ளூர் நேரப்படி அதிகாலை 1.12 மணிக்கு பெரும் தீவிபத்து ஏற்பட்டது.
இல்லத்தில் பிடித்த தீ கொளுந்து விட்டு எரிய ஆரம்பித்தது. தீயணைப்பு நிலையம் எதுவும் அருகில் இல்லாததால் தீயை அணைக்க உடனடியாகதீயணைப்பு வீரர்கள் வர முடியவில்லை.
தகவல் அறிந்து தீயணைப்பு வண்டிகள் வருவதற்குள் இல்லத்தின் பெரும் பகுதி எரிந்து போய் விட்டது. இந்த பயங்கர தீவிபத்தில் 63 முதியோர்கள்பரிதாபமாக கருகி இறந்தனர். 33 பேர் படுகாயமடைந்தனர்.
தீவிபத்துக்கான காரணம் குறித்து உடனடியாக தெரியவில்லை. தீவிபத்து குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications