பைக் மோதியதில் தகராறு: வாலிபர் கொலை
திருப்பூர்:திருப்பூரில் மோட்டார் சைக்கிள்கள் மோதிக் கொண்டதில் ஏற்பட்ட தகராறில், கத்தியால் குத்த முயன்ற நபரை பொதுமக்கள் அடித்தே கொன்றனர்.
தேனி மாவட்டம் சுருளிப்பட்டியைச் சேர்ந்த சுகுமாறன் (28) என்பவர் திருப்பூர் பனியன் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வந்தார். நேற்று இரவுசுகுமாறன் மோட்டார் சைக்கிளில் சென்றுக் கொண்டிருந்த போது எதிரே மோட்டர் சைக்கிளில் தன் தாயாருடன் வந்துக் கொண்டிருந்த சண்முகநாதன்(45) மீது எதிர்பாராதவிதமாக மோதிவிட்டார்.
இதனால் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த சுகுமாறன், தான் வைத்திருந்த கத்தியால் சண்முகநாதனையும் அவரதுதாயாரையும குத்த முயன்றார்.
இதில் சண்முகநாதனுக்கு தொடை உள்பட பல இடங்களில் காயம் ஏற்பட்டது. இதை பார்த்த பொதுமக்கள் வெகுண்டெழுந்து சுகுமாறனை பிடிக்கமுயன்றனர். ஆனால் சுகுமாறன் அவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டினார்.
ஆனால் சிலர் துணிந்து சுகுமாறனை மடக்கிப் பிடித்தனர். அப்போது அவர்களை சுகுமாறன் கத்தியால் குத்த முயன்றார். கோபமடைந்த பொதுமக்கள்சுகுமாறனை சரமாரியாக தாக்கியதால் அவர் மயங்கி விழுந்தார்.
விரைந்து வந்த போலீஸார் சுகுமாறனை திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.
சுகுமாறனால் தாக்கப்பட்ட சண்முகநாதனையும் மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்துவிசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications