உணவு பற்றாக்குறையில் தமிழ் அகதிகள்-ஐ.நா.
ஜெனீவா:கிழக்கு இலங்கையில் இடம் பெயர்ந்துள்ள தமிழர்களுக்கான உணவு இருப்பு வேகமாக காலியாகி வருவதாகவும், ஏப்ரல் மாதம் வரைதான் உணவுப்பொருட்களை வழங்க முடியும் என்றும் ஐ.நா. சபையின் உலக உணவுத் திட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இலங்கையின் கிழக்குப் பகுதியில் ராணுவத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்து வரும் கடும் சண்டை காரணமாக கிட்டத்தட்ட 1லட்சத்து 55 ஆயிரம் தமிழர்கள் இடம் பெயர்ந்துள்ளனர்.
இவர்களுக்கு ஐ.நா.வின் உலக உணவுத் திட்டத்தின் கீழ் உணவுப் பொருள் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது. மட்டக்களப்பிலிருந்து இடம்பெயர்ந்துள்ள தமிழர்களுக்கு இவர்கள் உணவு பொருட்களை விநியோகித்து வருகின்றனர்.
அரசு மற்றும் ஐ.நா. சபை அதிகாரிகள் அமைத்துள்ள அகதிகள் முகாம்கள் நிரம்பி வழிகின்றன. உணவுப் பொருட்களுக்கு அங்கு பெரும்பற்றாக்குறை நிலவுகிறது. சுகாதாரம் படு மோசமாக உள்ளது. நோய்களும் பரவுகின்றன. மிகப் பெரிய மனித உதவி நெருக்கடி அங்கு நிலவுவதாகஐ.நா. சபை தெரிவித்துள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ல முகாம்களில் மட்டும் 60 ஆயரிம் தமிழர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதேபோல பிற மாவட்டங்களில் 3லட்சம் பேர் தங்கியுள்ளனர்.
உலக உணவுத் திட்ட செய்தித் தொடர்பாளர் சிமோன் பிளூஸ் செய்தியாளர்களிடம் கூறுகையில், உணவு இருப்பு வேகமாக குறைந்து வருகிறது.ஏப்ரல் மாதத்திற்குள் தற்போது உள்ள இருப்பு காலியாகி விடும். அதன் பின்னர் நிலைமையை எப்படி சமாளிக்கப் போகிறோம் என்றுதெரியவில்லை.
நிதிப் பற்றாக்குறை காரணமாக எங்களது பல திட்டங்களை நாங்கள் ஏற்கனவே நிறுத்தி வைத்துள்ளோம். சண்டை நடக்கும் பகுதிகளில்பாதிக்கப்பட்டவர்களை அணுக முடியாத அளவுக்கு எங்களுக்கு அரசுத் தரப்பிலிருந்து தடைகள் போடப்படுகின்றன.
பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உதவுவதற்கு எங்களை அனுமதிக்க வேண்டும் என இலங்கை அரசையும், விடுதலைப் புலிகளையும் நாங்கள்கேட்டுக் கொண்டுள்ளோம் என்றார்.












Click it and Unblock the Notifications