மதிமுகவை களங்கப்படுத்த சதி: வைகோ
Subscribe to Oneindia Tamil
சென்னை:மதிமுகவினர் மீது பொய் வழக்குகளைப் போட்டு மக்கள் மத்தியில் மதிமுகவுக்கு களங்கம் ஏற்படுத்த திமுக அரசு சதித் திட்டம் தீட்டியுள்ளதாக மதிமுகபொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், ஆயுதக் கடத்தலுக்கு உதவினார் என்று கூறி மதிமுக அமைப்பச் செயலாளர் சீமா பஷீரைபொய்யான ஒரு வழக்கில் கைது செய்துள்ளனர். இது பொய்யான, ஜோடிக்கப்பட்ட வழக்கு என்பதில் சந்தேகம் இல்லை.
மதிமுக தமிழகத்தில் எப்போதும் சட்டவிரோத செயல்களில், வன்முறையில் ஈடுபட்டதில்லை, ஈடுபடப் போவதும் இல்லை.
மதிமுகவினர் மீது பொய்யான வழக்குகளைப் போட்டு, அவர்களை மிரட்டி தங்களது கட்சியில் இணைக்க திமுக சதி செய்கிறது. அதன் முதல் கட்டமேசீமா பஷீர் மீதான பொய் வழக்கு.
இந்த பொய் வழக்கை நாங்கள் சட்டப்படி சந்திப்போம் என்று கூறியுள்ளார் வைகோ.












Click it and Unblock the Notifications