திமுக அவதூறு வழக்கு: விஜயகாந்த் ஆப்சென்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை:திமுக பொருளாளரும், அமைச்சருமான ஆற்காடு வீராசாமி தொடர்ந்துள்ள அவதூறு வழக்கில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் நீதிமன்றத்தில்ஆஜராகவில்லை.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்துக்குச் சொந்தமான ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரி, கல்யாண மண்டபம், வீடு உள்ளிட்ட இடங்களில் சிலமாதங்களுக்கு முன்பு வருமானவரி சோதனை நடந்தது.

முதல்வர் கருணாநிதியின் தூண்டுதலால் தான் வருமானவரிச் சோதனை நடைபெற்றது என குற்றம் சாட்டி மாலை முரசு நாளிதழில் பேட்டி கொடுத்தார்விஜயகாந்த். இதையடுத்து விஜயகாந்த் மீதும், மாலை முரசு இதழ் மீதும் ஆற்காடு வீராசாமி, எழும்பூர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி பூதநாதன் நீதிமன்றத்தில் ஆஜராகும்படி விஜயகாந்திற்கு சம்மன் அனுப்பினார். இதையடுத்து விஜயகாந்த் நேரில்ஆஜரானார்.

இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. ஆனால் விஜயகாந்த் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அவரது வழக்கறிஞர் மணிமாறன்,விஜயகாந்த் விலைவாசி உயர்வை கண்டித்து இன்று ஆர்ப்பாட்டம் நடத்துவதால் அவரால் நீதிமன்றத்திற்கு வர முடியவில்லை. ஆகவேவிசாரணையை 3 வாரத்திற்கு பிறகு தள்ளி வைக்குமாறு கூறினார்.

இதற்கு ஆற்காடு வீராசாமி தரப்பு வழக்கறிஞர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஏப்ரல் 2ம் தேதிதள்ளிவைத்தார். அன்று விஜயகாந்த் கண்டிப்பாக ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+