காவிரி தீர்ப்பு: அதிமுகவின் 2வது உண்ணாவிரதம்
சென்னை:காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை மத்திய அரசு கெஜட்டில் வெளியிட வலியுறுத்தியும், இறுதித் தீர்ப்பை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கத் தவறியமத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும் சென்னை நீங்கலாக தமிழகம் முழுவதும் அதிமுகவினர் உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.
இக்கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 18ம் தேதி சென்னையில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா உண்ணாவிரதம் இருந்தார். 21ம் தேதிசென்னை நீங்கலாக தமிழகத்தின் இதர பகுதிகளில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான அதிமுகவினர் பங்கேற்றனர். அதிமுக அவைத் தலைவர்மதுசூதனன், திருவண்ணாமலையில் நடந்த போராட்டத்திற்குத் தலைமை தாங்கினார்.
மதுரையில் நடந்த போராட்டத்திற்கு ஓ.பன்னீர் செல்வமும், தேனி போராட்டத்திற்கு தினகரனும், சேலத்தில் நடந்த போராட்டத்திற்குகே.ஏ.செங்கோட்டையனும் தலைமை தாங்கினர்.












Click it and Unblock the Notifications