விளையாட்டாய் கழுத்தில் சுருக்கு-உயிரிழந்த சிறுமி
சென்னை:சுடிதார் துப்பட்டாவால் கழுத்தில் சுருக்குப் போட்டு விளையாடியபோது 7 வயது சிறுமி கழுத்து நெரிபட்டு பரிதாபமாக இறந்தார்.
சென்னை ஓட்டடேரியைச் சேர்ந்தவர் பாலாஜி. ஆட்டோ டிரைவரான இவரது மகள் ஸ்வேதா. தாயில்லாத குழந்தை ஸ்வேதா. தினசரி பிரிக்ளின்சாலையில் உள்ள தனது சகோதரர் வீட்டில் ஸ்வேதாவை விட்டு விட்டு ஆட்டோ ஓட்டச் செல்வார் பாலாஜி.
திங்கள்கிழமை காலையும் இதுபோல ஸ்வேதாவை விட்டு விட்டுச் சென்று விட்டார். அப்போது மொட்டை மாடிக்குச் சென்று விளையாடியுள்ளார்ஸ்வேதா. தனது துப்பட்டாவை எடுத்து கழுத்தில் மாட்டிக் கொண்டு மறு முனையை கொடி கட்டும் கம்பியில் மாட்டி விட்டு விளையாடியுள்ளார்.
அப்போது எதிர்பாராதவிதமாக கழுத்தில் சுருக்கு இறுக்கி மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தார் ஸ்வேதா. உடனடியாக அவரை கீழ்ப்பாக்கம்அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். பின்னர் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டது. சிகிச்சை பலனின்றிபரிதாபமாக இறந்தார் ஸ்வேதா.












Click it and Unblock the Notifications