முன்னாள் துணைவேந்தர் குடும்பத்துக்கு சிறை
சென்னை:சென்னை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பி.டி.மனோகரனின் மருமகள் மதுதேவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில், மனோகரன்,அவரது மனைவி, மகன் ஆகியோரை சிறையில் அடைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
![]() |
பி.டி.மனோகரனின் மகன் நவீன்குமாரின் மனைவி மதுதேவி. இவர் கடந்த ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். வரதட்சணைக் கொடுமைகாரணமாக மதுதேவி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. இருப்பினும் டிவி நடிகை நிர்மலாவுக்கும், நவீன்குமாருக்கும் இருந்த கள்ளத்தொடர்பு காரணமாகவே மதுதேவி மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது.
இதுதொடர்பாக நிர்மலாவிடம் போலீஸார் விசாரணையும் நடத்தினர். இந்த வழக்கில் நவீன்குமார் கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமீனில்விடுதலையானார். மனோகரன், அவரது மனைவி கற்பகவள்ளி ஆகியோர் முன்ஜாமீன் பெற்றனர்.
![]() |
இந்த நிலையில் இவர்களுக்கு அளிக்கப்பட்ட முன்ஜாமீனையும், நவீன்குமாருக்கு அளிக்கப்பட்ட ஜாமீனையும் ரத்து செய்ய வேண்டும் என்று கோரிமதுதேவியின் சகோதரர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் மனோகரன் உள்ளிட்ட 3 பேரும் மகளிர் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என உத்தரவிட்டது.அதன்படி இன்று 3 பேரும் மகளிர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இதைத் தொடர்ந்து அவர்களை 15 நாள் சிறைக் காவலில் வைக்குமாறு நீதிமன்றம்உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து 3 பேரின் சார்பிலும் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது இன்று மாலை தீர்ப்பு அளிக்கப்படுகிறது.














Click it and Unblock the Notifications