முன்னால சைக்கிள், பின்னாடியே காரு
சென்னை:வாகனப் புகையால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதைத் தடுக்க வலியுறுத்தி, பாமக உறுப்பினர்கள் சட்டசபைக்கு சைக்கிளில் வந்தனர். ஆனால் அவர்கள்அத்தனை பேரின் கார்களும், சைக்கிள்களை பின்தொடர்ந்து வந்தது அவர்களின் நோக்கத்திற்கு நேர் மாறாக இருந்தது.
வாகனப் புகையால் காற்று மாசு ஏற்படுவதைத் தடுக்கக் கோரியும், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் பாமக சட்டமன்றஉறுப்பினர்கள் அத்தனை பேரும் இன்று ஆளுக்கு ஒரு சைக்கிளில் சட்டசபைக்கு வந்தனர்.
கட்சிக் கொடி கட்டிய சைக்கிள்களில் வந்த அவர்களைப் பார்த்து பொதுமக்கள் ஆச்சரியத்துடன் கவனித்தனர். ஆனால் சைக்கிள்களைப் பின்தொடர்ந்து வரிசையாக பல ஆடம்பரக் கார்கள் வந்தததைப் பார்த்த அவர்கள், இது யாருடைய கார்கள் என்று கேள்வி கேட்டனர்.
அதற்கு அவர்களுக்குக் கிடைத்த பதில், பாமக எம்.எல்.ஏக்களின் சைக்கிள் சவாரிக்கு கெட்ட பெயரையே ஏற்படுத்திக் கொடுத்தது. காரணம், அந்தஆடம்பரக் கார்கள் எல்லாம் பாமக எம்.எல்.ஏக்களின் கார்கள்.
சைக்கிள்களைப் பின் தொடர்ந்து இந்தக் கார்களும் புகையைக் கக்கியபடி வந்ததைப் பார்த்த பொதுமக்கள், சைக்களில் வந்ததற்குப் பேசாமல்கார்களிலேயே வந்திருக்கலாம் என்று அலுப்புடன் கூறியபடி அகன்று சென்றனர்.












Click it and Unblock the Notifications