மாணவிகளிடம் சில்மிஷம்: த. ஆசிரியர் சஸ்பெண்ட்

Subscribe to Oneindia Tamil

வாணியம்பாடி:மாணவிகளிடம் செக்ஸ் திருவிளையாடலில் ஈடுபட்ட பள்ளிக்கூட தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி புதூர், அண்ணா நகரைச் சேர்ந்தவர் அலபான் கென்னடி. இவருக்கு 40 வயதாகிறது. இடையன் பள்ளம்கிராமத்தில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளியில் தலைமை ஆசிரியராக இருக்கிறார்.

இங்கு 5ம் வகுப்பு படிக்கும் மாணவிகளிடம் கடந்த ஒரு மாதமாக செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். குறிப்பிட்ட 5 மாணவிகளிடம் மயங்கியஅந்த தலைமை ஆசிரியர் அவர்களை தனியாக அழைத்துச் சென்று செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.

இந்த சேட்டை தவிர அவ்வப்போது குடித்து விட்டும் பள்ளிக்கூடத்துக்கு மப்பில் வருவாராம் அலபான் கென்னடி. இந்த சமயங்களில்மாணவிகளிடம் அத்துமீறி நடந்து கொள்வாராம்.

அவரது அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதைப் பார்த்த மாணவ, மாணவியர் தங்களது ஊரில் சொல்லியுள்ளனர். இதையடுத்துஇடையன்பள்ளம் கிராமமே கொதித்துக் கொந்தளித்து பஞ்சாயத்து தலைவரிடம் புகார் கூறியது.

இதையடுத்து ஆலங்காயத்தில் உள்ள கூடுதல் தொடக்கக் கல்வி அதிகாரி நவநீதி பாலகிருஷ்ணனிடம் புகார் போனது. மாவட்ட தொடக்கக் கல்விஅதிகாரி மாணிக்கத்தின் உத்தரவின் பேரில் விசாரணை நடந்தது.

அதில் குடிபோதையில் வந்தது, மாணவிகளிடம் செக்ஸ் அட்டூழியம் செய்தது ஆகியவை நிரூபணமானது. இதையடுத்து அலபான் கென்னடிசஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

மேலும் அவர் மீது போலீஸிலும் புகார் கொடுக்கப்பட்டது. அவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+