பாப் உல்மர் கழுத்தை நெரித்துக் கொலை?
கிங்ஸ்டன்:பாகிஸ்தான் கிரிக்கெட் பயிற்சியாளர் பாப் உல்மர் கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக ஜமைக்கா ரேடியோ வெளியிட்டுள்ளசெய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாப் உல்மர் மரணம் குறித்து அடுத்தடுத்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில் நேற்று தான் முதல் முறையாக பாப் உல்மர்கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற செய்தி அதிகாரப்பூர்வமாக வெளியானது.
![]() |
இந்தச் சூழ்நிலையில் பாப் உல்மர் கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக ஜமைக்கா ரேடியோ செய்தி கூறுகிறது. ஜமைக்கா ரேடியோவின்நிருபர் ரோஹன் போலல் இந்த செய்தியை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், கழுத்து நெரித்துத்தான் பாப் உல்மர் கொலை செய்யப்பட்டுள்ளார். காவல்துறை இந்த செய்தியை விரைவில்பகிரங்கமாக வெளியிடவுள்ளது. எனக்கு இந்தத் தகவலை யார் கொடுத்தார்கள் என்பதை நான் தெரிவிக்க விரும்பவில்லை.
![]() |
மிக மிக நம்பகத்தன்மை கொண்ட ஒரு இடத்திலிருந்து இந்த செய்தி எனக்குக் கிடைத்துள்ளது. விரைவில் இந்த செய்தியை காவல்துறைஉறுதிப்படுத்தும்.
உல்மரின் கழுத்தில் நெரிக்கப்பட்டதற்கான அடையாளங்களை மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர். உல்மர் விழுந்து கிடந்த அறையில் வாந்திஎடுத்த அடையாளம், அவரது உடலிலிருந்து மலம் வெளியேறியது, அறையில் சிதறிக் கிடந்த ரத்தம் ஆகியவை இதை நிரூபிப்பதாக உள்ளது என்றுகூறியுள்ளார் போலல்.
ஜமைக்கா நிருபர் தெரிவித்துள்ள இந்தத் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே, உல்மரின் உடல் சனிக்கிழமை தென் ஆப்பிரிக்காவில் உள்ள கேப்டவுனுக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.














Click it and Unblock the Notifications