இளம்பெண் கற்பழிப்பு: கல்லூரி மாணவர் கைது
திருநெல்வேலி:திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி இளம்பெண்ணை கற்பழித்த கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை மாவட்டம் தென்காசி அருகேயுள்ள மேல இலஞ்சியை சேர்ந்தவர் மீனா (18). இவர் தென்காசியில் ஒரு ஜவுளிகடையில் வேலை பார்த்து வருகிறார். இதேபகுதியை சேர்ந்த மணிகண்டன் (21), இவர் பி.காம் இறுதியாண்டு படித்து வருகிறார்.
கடந்த சில வருடங்களாக மீனாவும், மணிகண்டனும் நண்பர்களாக பழகிவந்துள்ளனர். இவர்கள் நட்பு நாளடைவில் காதலாக மாறியது. மணிகண்டன் திருமண ஆசை கூறிபலமுறை மீனாவுடன் உல்லாசமாக இருந்துள்ளார்.
இதற்கிடையில் கடந்த சில நாட்களாக மீனா, மணிகண்டனிடம் தன்னை திருமணம் செய்துள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால் மணிகண்டன் இதை மறுத்துள்ளார்.
இதையடுத்து மீனா தென்காசி போலீசாரிடம் நேற்று ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் மணிகண்டன் தன்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி தன்னை கற்பழித்துவிட்டார் என கூறினார். இந்த புகார் மனுவை ஏற்றுக் கொண்ட போலீசார் மணிகண்டனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications