ஆர்ச்பிஷப் ஆரோக்கியசாமி மரணம்

Subscribe to Oneindia Tamil

மதுரை:முன்னாள் மதுரை ஆர்ச்பிஷப் ஆரோக்கியசாமி (76) உடல் நலக் குறைவால் மரணமடைந்தார்.

மதுரை கத்தோலிக்க மறை மண்டல ஆர்ச் பிஷப்பாக நீண்ட காலம் இருந்தவர் ஆரோக்கியசாமி. 2003ம் ஆண்டு அப்பதவியிலிருந்து ஓய்வுபெற்றார்.

திருச்சி மாவட்டம் புதூர் உத்தமனூர் என்ற கிராமத்தில் 1931ம் ஆண்டு பிறந்தவர் ஆரோக்கியசாமி. ரோம் நகருக்கு மேல் படிப்பு படிக்கப்போனபோது அங்கு பாதிரியராக மாறினார்.

பின்னர் 1970ம் ஆண்டு கோட்டார் மறை மாவட்ட பிஷப்பாக நியமிக்கப்பட்டார். 17 ஆண்டு காலம் இந்தப் பொறுப்பை அவர் வகித்தார். அவரதுகாலத்தில், மண்டைக்காட்டில் ஏற்பட்ட மிகப் பெரிய மதக் கலவரத்தை துணிச்சலான நடவடிக்கையால் முடிவுக்கு கொண்டு வந்தார்.

1987ம் ஆண்டு ஆர்ச் பிஷப்பாக பதவி உயர்த்தப்பட்டார். மதுரை மறைமண்டல ஆர்ச் பிஷப்பாக செயல்பட்டார்.

தனது பதவிக்காலத்தில், அனைத்து மதத்தினரையும் உள்ளடக்கிய திருவருட் பேரவை என்ற அமைப்பை உருவாக்கினார். மத ஒற்றுமைக்கானஅமைப்பு இது.

இதேபோ ஐக்கிய கிறிஸ்தவ கவுன்சில், சிறுபான்மையினர் முன்னணி ஆகியவற்றையும் ஆரம்பித்தார்.

கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிறுவனங்கள் மீது பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டபோது அதைக்கடுமையாக எதிர்த்துப் போராடினார். அதேபோல, கட்டாய மதமாற்றத் தடைச் சட்டம் கொண்டு வரப்பட்டபோதும் அதற்கு எதிராக போராடினார்.

ஆரோக்கியசாமியின் உடல் அடக்கம் மதுரையில் உள்ள புனித மேரி பேராலயத்தில் சனிக்கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+