பாக். தலைமை நீதிபதியாக ஹிந்து நியமனம்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் உச்சநீதிமன்ற தற்காலிக தலைமை நீதிபதியாக இந்து சமூகத்தைச் சேர்ந்த ரானா பகவான்தாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்தவர் இப்திகார் முகம்மது செளத்ரி. கடந்த 9ம் தேதி இவரை அதிரடியாக பதவியிலிருந்துநீக்கினார் அதிபர் முஷாரப். இதனால் பாகிஸ்தான் நீதித்துறையினர் மிகப் பெரிய போராட்டத்தில் குதித்துள்ளனர்.
![]() |
இந்த நிலையில், புதிய தற்காலிக தலைமை நீதிபதியாக நீதிபதி ரானா பகவான்தாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் நீதித்துறை வரலாற்றிலேயேமுதல் முறையாக இந்து சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தானில் உள்ளநீதிபதிகளிலேயே ரானா மட்டுமே இந்து என்பது குறிப்பிடத்தக்கது.
நாளை தனது புதிய பதவியை ஏற்றுக் கொள்கிறார் ரானா. இதற்கிடையே, சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள தலைமை நீதிபதி செளத்ரியின்வழக்கறிஞர்கள், நீதிபதி ரானாவை தற்காலிக தலைமை நீதிபதியாக கருத முடியாது என்று கூறியுள்ளனர்.
இதுகுறித்து செளத்ரியின் வழக்கறிஞர்களில் ஒருவரான முனீர் மாலிக் கூறுகையில், தலைமை நீதிபதி செளத்ரி பதவியிலிருந்து டிஸ்மிஸ்செய்யப்படவில்லை. எங்களைப் பொறுத்தவரை அவர்தான் தலைமை நீதிபதி. அவரது இடத்தில் யாரையும் நாங்கள் அங்கீகரிக்க மாட்டோம்.
நீதிபதி பகவான்தாஸை, உச்சநீதிமன்றத்தின் மூத்த நீதிபதியாக ஏற்றுக் கொள்கிறோம். அதேசமயம், அவரை செளத்ரியின் இடத்தில் வைத்து நாங்கள்பார்க்கவில்லை என்றார்.













Click it and Unblock the Notifications