பெரியாறில் 2வது அணை உறுதி: கேரளா வீம்பு
திருவனந்தபுரம்:முல்லைப் பெரியாறு அணை அருகே இன்னொரு அணையைக் கட்டியே தீருவோம் என்று கேரள நீர்ப்பாசனத்துறை அமைச்சர் பிரேமச்சந்திரன்கூறியுள்ளார்.
முல்லை பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக உயர் அதிகாரிகள் கூட்டம் திருவனந்தபுரத்தில் நடந்தது. அதில், கேரள நீர்ப்பாசனத்துறைஅமைச்சர் பிரேமசந்திரன் கலந்து கொண்டார்.
கூட்டத்தில் அவர் பேசுகையில், யார் எதிர்த்தாலும் முல்லை பெரியாற்றில் புதிய அணை கட்டுவது உறுதி. தமிழகத்தின் விருப்பம் போல் முல்லைபெரியாறு தண்ணீரை தடுத்து நிறுத்தும் இடமாக அனுமதிக்க மாட்டோம்.
தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தருவதை நாங்கள் எதிர்க்கவில்லை. தொடர்ந்து தரவும் தயாராக உள்ளோம். ஆனால் தற்போது உள்ள அணைக்குப்பதிலாக புதிய அணை கட்ட வேண்டும். அதற்கு தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் என்றார் அவர்.
இந்தக் கூட்டத்தில் தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளறும், மதுரை மாவட்ட முன்னாள் ஆட்சித் தலைவருமான ஸ்ரீயக் என்பவரும்கலந்து கொண்டார். இக்கூட்டத்தில் கேரள அரசுக்கு ஆதரவாக அவர் பேசினார்.
அவர் பேசுகையில், முல்லை பெரியாறில் நமது செலவில் அணை கட்டி தமிழ்நாட்டிற்கு தண்ணீர் கொடுப்பது சரியல்ல. அந்த அணையைதமிழ்நாட்டை வைத்துதான் கட்ட வேண்டும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications