பட்ஜெட்: காங், அரசு ஊழியர்கள் வரவேற்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:தமிழக பட்ஜெட், ஏழை, எளியவர்கள், அரசு ஊழியர்கள் நலனைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி கருத்துதெரிவித்துள்ளது.

தமிழக பட்ஜெட் குறித்து காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி கூறுகையில், அரசு ஊழியர்கள், ஏழை, எளியவர்கள், தொழிலாளர்கள், உடல்ஊனமுற்றோர், விவசாயிகள் ஆகியோரின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் கடனுக்காக ரூ. 1360 கோடி ஒதுக்கப்பட்டிருப்பது பாராட்டத்தக்கது. அதேபோல விவசாயக் கடன் வட்டியும் 5 சதவீதமாககுறைக்கப்பட்டுள்ளது வரவேற்புக்குரியது.

கூட்டுறவு சங்கத் தேர்தல் நடைபெறும் என அறிவித்திருப்பதை வரவேற்கிறேன். பருப்பு, சமையல் எண்ணை உள்ளிட்டவற்றை ரேஷன் கடைகள்மூலம் விலைவாசி உயர்வு கட்டுப்படுத்தப்படும்.

மொத்தத்தில் இந்த பட்ஜெட் கருணை நிதி கொண்டு கருணாநிதி தயாரித்த சிறப்பான பட்ஜெட் என்றார்.

ஜனநாயக முன்னேற்றக் கழகத் தலைவர் ஜெகத்ரட்சகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், விவசாயிகளுக்கு சலுகைகள் அளித்து அவர்களின்வாழ்க்கைத் தரம் முன்னேற சமர்ப்பித்த இந்த அரசின் நிதி நிலை அறிக்கை வரவேற்கத்தக்கது.

எல்லாத் தரப்பு மக்களும் பாராட்டுகின்ற வகையில் இந்த வரியில்லா பட்ஜெட்டைத் தாக்கல் செய்துள்ள கலைஞர் அரசு பாராட்டுக்குரியதாகும்என்று கூறியுள்ளார்.

இதேபோல பல்வேறு அரசு ஊழியர்கள், அலுவலர்கள் சங்கங்களும் பட்ஜெட்டுக்கு பாராட்டு தெரிவித்துள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+