மீனாட்சி கொலை வழக்கு: 2 பேருக்கு ஆயுள்

Subscribe to Oneindia Tamil

கரூர்:குளித்தலை ஆசிரியை மீனாட்சி கொலை வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

கரூர் மாவட்டம் குளித்தலையைச் சேர்ந்தவர் ஆசிரியை மீனாட்சி. கடந்த 2004ம் ஆண்டு இவர் காணாமல்போனார். மீனாட்சி காணாமல் போன விவகாரத்தில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. பாப்பா சுந்தரத்திற்குத்தொடர்பு இருப்பதாக அப்போது பெரும் சர்ச்சை எழுந்தது. இதனால் இந்த வழக்கு தமிழக அளவில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.

கிட்டத்தட்ட ஒரு ஆண்டுகளுக்கும் மேலாக மீனாட்சி வழக்கில் எந்தத் துப்பும் கிடைக்காமல் இருந்து வந்தது.இந்த நிலையில் சிபிசிஐடிக்கு வழக்கு மாற்றப்பட்ட பின்னர் வழக்கில் துப்பு துலங்கியது.

கடந்த ஆண்டு குளித்தலை அருகே உள்ள ராஜேந்திரபுரம் என்ற இடத்தில் வயல் பகுதியில் புதைக்கப்பட்டிருந்தமீனாட்சியின் எலும்புக் கூடும், அவரது மொபட்டும் கண்டுபிடிக்கப்பட்டன.

மீனாட்சியைக் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்து புதைத்ததாக சண்முகவேல், குமார்ஆகிய இருவரை போலீஸார் கைது செய்தனர்.

கரூர் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் இவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணையின்போதுநாங்கள் அப்பாவிகள் என்று இருவரும் தெரிவித்தனர். மேலும் சில சாட்சிகளும் பிறழ் சாட்சயம்தெரிவித்தனர்.

இந்த நிலையில் இன்று இவ்வழக்கில் நீதிபதி அய்யப்பன் தீர்ப்பளித்தார். அதன்படி இரு குற்றவாளிகளுக்கும்ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+