பொள்ளாச்சி நா. மகாலிங்கத்துக்கு பத்மபூஷன்:வாலிக்கு பத்மஸ்ரீ- கலாம் வழங்கினார்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:பிரபல தொழிலதிபர் அருட்செல்வர் பொள்ளாச்சி நா.மகாலிங்கத்துக்கு ஜனாதிபதி அப்துல் கலாம் பத்மபூஷன் விருதை வழங்கினார்.
நாடு முழுவதும் பல்வேறு துறைகளில் சிறந்த சேவை செய்தவர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டன. இதில் நா. மகாலிங்கம், கவிஞர் வாலி உட்பட தமிழகத்தைசேர்ந்த 13 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
![]() |
ஜனாதிபதி மாளிகையில் நேற்று நடந்த விழாவில் அப்துல் கலாம் விருதுகளை வழங்கினார். பொள்ளாச்சி நா.மகாலிங்கம், பேராசிரியர் நீலகண்ட ஸ்ரீனிவாசன்,மோகினி கிரி ஆகியோருக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது.
கவிஞர் வாலி, நம்பெருமாள்சாமி, கீதா சந்திரன், ராமசாமி பழனிச்சாமி, டாக்டர் மயில்வாகனன் நடராஜன், மீனாட்சி கோபிநாத், தட்சிணாமூர்த்தி பிள்ளை, தனுபத்மனாபன், வலையபட்டி ஏ.ஆர்.சுப்பிரமணியன் ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்பட்டன.













Click it and Unblock the Notifications