அயர்லாந்தை வென்றது வெஸ்ட் இண்டீஸ்
கிங்ஸ்டன்:அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
"டி" பிரிவில் இடம்பெற்றுள்ள இந்த இரு அணிகளும் ஏற்கனவே சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்று விட்டன. இந்த நிலையில் இப்பிரிவில் கடைசி லீக்போட்டி நேற்று நடந்தது.
கிங்கஸ்டனில் நடந்த இந்தப் போட்டியில் முதலில் அயர்லாந்து பேட்டிங் செய்தது. மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் பந்துவீச்சாளர்களைசோதிக்கும் வகையில் நிதான ஆட்டத்தை தொடங்கினர் அயர்லாந்து வீரர்கள்.
படு நிதானமாக ஆடிய அயர்லாந்து ஒருபக்கம் பரவாயில்லையே என்று சொல்லும் அளவுக்கு ரன்களையும் எடுத்து வந்தது. தொடக்கஆட்டக்காரராக இறங்கிய பிரே படு நிதானமாக ஆடி 41 ரன்களை எடுத்தார். போத்தா சிறப்பாக ஆடி 28 ரன்களை சேர்த்தார். மெக்கல்லன்ஆட்டமிழக்காமல் 20 ரன்களை எடுத்தார்.
இடையே மழை குறுக்கிட்டதால் 48 ஓவர்களைக் கொண்டதாக போட்டி சுருக்கப்பட்டது. இறுதியில் 8 விக்கெட் இழப்புக்கு 183 ரன்களை எடுத்ததுஅயர்லாந்து.
பின்னர் ஆடத் தொடங்கிய மேற்கு இந்தியத் தீவுகள் அணி சிறப்பாக ஆடி ரன்களைக் குவித்தது. சந்தர்பால் அபாரமாக ஆடி ஆட்டமிழக்காமல் 102ரன்களை எடுத்தார். சர்வான் 36, சாமுவேல்ஸ் 27 ரன்கள் எடுத்தனர். 38.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 190 ரன்களை எடுத்துமேற்கு இந்தியத் தீவுகள் அணி வெற்றி பெற்றது.












Click it and Unblock the Notifications