கண்கட்டு வித்தை பட்ஜெட்: ஜெ. சாடல்
சென்னை:மக்களை ஏமாற்றும் கண் கட்டு வித்தை போல ஒரு பட்ஜெட்டைத் தாக்கல் செய்துள்ளது திமுக அரசு என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாகூறியுள்ளார்.
தமிழக அரசின் 2007-08 பட்ஜெட் குறித்து ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:
ஒரு நிறுவனத்தின் ஆண்டு வரவு செலவுக் கணக்கு போல இந்த பட்ஜெட் உள்ளது. மக்கள் நலனுக்கான அறிக்கையாக இது இல்லை. எனக்குசட்டசபையில் உரையாற்ற போதுமான நேரம் தந்தால், யாரும் குறுக்கிடாமல் என்னைப் பேச அனுமதித்தால், பட்ஜெட் குறித்த கருத்துக்களைசபையில் விரிவாக எடுத்துரைப்பேன்.
மக்களை ஏமாற்ற, எடுக்கப்பட்ட, கண்கட்டி வித்தைதான் இந்த பட்ஜெட். தங்களது ஏமாற்று வேலைகளை மக்களை நம்ப வைக்க இந்த பட்ஜெட்டைபயன்படுத்தியுள்ளார் அன்பழகன்.
திமுகவினர் சொன்ன வாக்குறுதிகளை எல்லாம் நடைமுறைப்படுத்தாமல் உள்ளனர் என்பதை மக்கள் அறிவார்கள். இந்த நிலையில் தற்போதுசொல்கிற திட்டங்களை எல்லாம் அடுத்த ஆண்டிலாவது விவசாயிகள் பெறுவார்களா என்பது சந்தேகம்தான்.
விவசாயிகளுக்கான பயிர்க் கடன் வட்டி 7 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாக ஒரு மாயத் தோற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.ஆனால் வாங்கி கடனை முறையாக திருப்பிச் செலுத்துவோருக்கே இந்த வட்டிக் குறைப்பு சலுகை கிடைக்கும் என்பதுதான் உண்மை நிலவரம்.
எனது ஆட்சிக்காலத்தில்தான் தமிழகத்தில் தொழில் வளம் பெருகியது. அடிப்படைக் கட்டமைப்பு மேம்பட்டது. அதை வைத்துத்தான் இப்போதுதமிழகத்தை நோக்கி பல பெரும் நிறுவனங்கள் வரத் தொடங்கியுள்ளன. அதேபோல தற்போது உள்ள நிதி ஆதாரம் எல்லாம் அதிமுக ஆட்சியில்,எனது அயராத உழைப்பின் விளைவாக உலக வங்கியிடமிருந்து பெறப்பட்ட கடன் தொகை. இதைத்தான் பல பயனற்ற திட்டங்களுக்கு திமுக அரசுபயன்படுத்தி வருகிறது.
பட்ஜெட்டில் வரவு செலவுக் கணக்கு தெளிவாக இல்லை. உண்மையான நிதி நிலை குறித்து தெரிவிக்கப்படவில்லை. அதுகுறித்து வெளிப்படையாகஅறிவிக்க வேண்டும்.
அரசின் வருமானம் உயர்ந்துள்ளதாக நிதி நிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இவை எல்லாம் எனது ஆட்சியில் மணல் குவாரி,மதுபான விற்பனை ஆகியவற்றை அரசே எடுத்துக் கொண்டதால் அதனால் கிடைத்த வருமானம்.
இந்த நிதி நிலை அறிக்கை ஒரு இலக்கற்ற அறிக்கை, இதில் தீர்க்கமான பார்வை இல்லை, மக்கள் நலனுக்கென்று எதுவும் இல்லை. இந்த நிதி நிலைஅறிக்கையில் உள்ள அம்சங்கள், திட்டங்கள் சாதாரண மனிதனின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த உதவாது என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications