சங்கரா மருத்துவமனை ரூ.240 கோடிக்கு ஏலம்!
சென்னை:சங்கர மடத்திற்குச் சொந்தமான சங்கரா மருத்துவமைன ரூ. 240 கோடிக்கு ஏலம் கேட்கப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.ஷாவின்ஒப்புதலுக்கு இதுதொடர்பான மனு அனுப்பப்பட்டுள்ளது.
காஞ்சி காமகோடி பீட அறக்கட்டைளக்கு சொந்தமாக சென்னை அருகே பெரும்பாக்கத்தில் சங்கரா மருத்துவமனை உள்ளது. முன்பு இந்த மருத்துவமனையின் பெயர்தமிழ்நாடு மருத்துவமனை ஆகும். பின்னர் சங்கர மடம் இதை வாங்கி சங்கரா மருத்துவமனை என பெயர் மாற்றியது.
இதை கையகப்படுத்துவதில் தான போயஸ்கார்டனுக்கும் சங்கர மடத்துக்கும் இடையே முட்டிக் கொண்டது. சங்கராச்சாரியாரை உள்ளே தள்ளியன் பின்னணியில்இந்த விவகாரமும் இருப்பது விரிவாகவே விவாதிக்கப்பட்டது. மருத்துவமனையை அமுக்க மன்னார்குடி கும்பல் தீவிரமாக முயன்று தோற்றதால் தான் கொலை கேசில்மாட்டி விடப்பட்டார் ஜெயேந்திரர் என்றார்கள்.
இந் நிலையில் இந்த சங்கரா மருத்துவமனையை ஏலத்தில் விற்க சங்கர மடம் தீர்மானித்தது. இதற்கு சென்னை உயர்நீதிமன்றமும் அனுமதி அளித்தது. வியாழக்கிழமைஇந்த ஏலம் நடந்தது.
ஏலத்தின்போது சென்னையைச் சேர்ந்த ஸ்ரீராம் பிராப்பர்ட்டீஸ் என்ற நிறுவனம் ரூ. 220 கோடிக்கு ஏலம் கேட்டது. இதையடுத்து கல்கத்தாவைச் சேர்ந்த ஒரு நிறுவனம் ரூ.236 கோடிக்கு கேட்டது. இதைத் தொடர்ந்து ஸ்ரீராம் நிறுவனம் தனது தொகையை ரூ. 240 கோடியாக உயர்த்தியது. அதற்கு மேல் யாரும் கேட்கவில்லை.
இதையடுத்து இந்த ஏலம் தொடர்பான விவரம் தலைமை நீதிபதி ஏ.பி.ஷாவுக்கு தெரிவிக்கப்பட்டு ஏலத்தை இறுதி செய்ய அனுமதி கோரப்பட்டது.
அந்த மனுவை பரிசீலித்த தலைமை நீதிபதி அதிக தொகையை ஏலமாக கேட்ட ஸ்ரீராம் நிறுவனம் அதில் 10 சதவீதத் தொகையை நீதிமன்றத்தில் கட்டுமாறும், இந்தஇடத்தை ஏலத்திற்கு எடுத்து என்ன செய்யப் போகிறீர்கள் என்பது குறித்து விளக்கமாக ஒரு அறிக்கை தாக்கல் செய்யுமாறும் உத்தரவிட்டார்.
மார்ச் 28ம் தேதிக்குள் இவற்றை ஸ்ரீராம் நிறுவனம் செய்ய வேண்டும். அதன் பின்னர் ஏலம் இறுதி செய்யப்படும்.












Click it and Unblock the Notifications