சங்கடப்படுத்திய பாமக எம்எல்ஏக்கள்-கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

சென்னை:திமுக பேச்சாளர் வெற்றிக்கொண்டான் பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குறித்து விமர்சித்தற்காக, பா.ம.கஎம்.எல்.ஏ.க்கள் கண்டன வாசகங்கள் அடங்கிய பதாகைகளை தலைமைச் செயலகத்திற்குள் ஏந்தி வந்ததுசங்கடத்தை கொடுத்துள்ளதாக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த சில மாதங்களாகவே நம்முடையதோழமைக்கட்சி அணியில் உள்ள பா.ம.கவுக்கும், திமுகவுக்கும் இடையே சில தேவையற்ற கசப்புணர்வுகளுக்குவித்திடப்பட்டுவிட்டது.

தோழமைக் கட்சிகளின் அணியின் தலைவர் என்ற முறையில் திமுகவைப் பற்றியும், ஆட்சியைப்பற்றியும்விமர்சனங்களை வெளியிட எந்தக் கட்சிகள் மீதும் குறை காணுகிற மோதல் போக்கை கடைப்பிடிக்காமல்,தோழமையைக் கட்டிக்காக்கும் தூய எண்ணத்தோடு அமைதியாக இருந்து வந்திருக்கிறேன்.

இந்த நிலையில், கழகத்தின் முன்னணிப்பேச்சாளர்களில் ஒருவரான தம்பி வெற்றிகொண்டான், பா.ம.க நிறுவனத்தலைவர் மருத்துவர் அய்யா ராமதாஸ் கழக ஆட்சியைப்பற்றி செய்துள்ள விமர்சனங்களுக்கு பதில் என்றபெயரால் ஒரு பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் திமுக கடைபிடித்து வருகின்ற கடமை, கண்ணியம்,கட்டுப்பாடு ஆகியவற்றிக்கு மாறான வார்த்தையைப் பயனபடுத்தியிருப்பது கண்டு நான் மிகவும்வேதனைப்படுகிறேன்.

இதுப்பற்றி கோ.மணி தலைமையில் என்னிடம் புகார் செய்ய வந்த பா.ம.க சட்டமன்ற உறுப்பினர்களிடம்விளக்கம் அளித்து வருத்தமும் தெரிவித்திருக்கிறேன். ஆனால் எனக்குள்ள ஒரே ஒரு சங்கடம், தலைமைச்செயலகத்தின் உள்ளேயே, முதலமைச்சர் அறைக்குள் கண்டன வாசகங்கள் எழுதியுள்ள பதாகைகளோடுஅவர்கள் வந்ததுதான்.

இதைச் சட்டமன்ற உறுப்பினர்கள் பின்பற்றினால் விரும்பத் தகாத ஒரு முன்னுதாரணம் ஆகி விடும் என்பதைபாட்டாளி மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் உணரவேண்டும். இதை நான் சொல்வதால்வெற்றிகொண்டான் பேட்டியின் வாசகங்களை நியாயப்படுத்துவதாக அர்த்தம் இல்லை என்று கூறியுள்ளார்கருணாநிதி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+