கு.க.வுக்கு தாய் மறுப்பு- பிறந்த குழந்தையைகாட்ட மறுக்கும் அரசு மருத்துவமனை !!

Subscribe to Oneindia Tamil

காஞ்சிபுரம்:குடும்பக் கட்டுப்பாடு அறுவைச் சிகிச்சை செய்து கொள்ள தாய் மறுத்ததால், அவருக்குப் பிறந்த குழந்தையை கண்ணில் காட்டாமல் தவிக்க விட்டு வருகிறது காஞ்சிபுரம்அரசு மருத்துவமனை.

காஞ்சிபுரம் அருகே உள்ளது ஆரப்பாக்கம். இந்த கிராமத்தைச் சேர்ந்த ரேஷ் என்பவ>ன் மனைவி தீபா. இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்தநிலையில் மீண்டும் கர்ப்பம் தரித்த தீபா, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக சேர்க்கப்பட்டார்.

சில நாட்களுக்கு முன் குறை பிரசவம் மூலம் குழந்தை பிறந்தது. குழந்தையைக் கண்ணில் காட்டுவதற்கு அரசு மருத்துவமனை ஆயாக்கள் பணம் கேட்டுள்ளனர்.மேலும், குடும்பக் கட்டுப்பாடு அறுவைச் சிகிச்சை செய்து கொள்ளுமாறும் வற்புறுத்தியுள்ளனர்.

ஆனால் அதற்கு உடன்பட தீபா மறுத்து விட்டார். இதனால் குழந்தை பிறந்து 3 நாட்களாகியும் குழந்தையை தாயின் கண்ணில் காட்டாமல் இருந்துள்ளனர் அந்த கொடூரஆயாக்கள்.

பிறந்து 3 நாட்களாகியும் குழந்தையை காட்டாமல் தனிமைப்படுத்தியதால் இது குறித்து தீபா மருத்துவமனையை டீன் டாக்டர் எஸ்.குமாரிடம் புகார் கூறியுள்ளார்.

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில், குழந்தை ஆணாக இருந்தால் ரூ.500-ம் பெண்ணாக இருந்தால் ரூ.300-ம் பணம் கொடுக்க வேண்டுமாம். அப்படிக்கொடுத்தால்தான் குழந்தையை தாயிடம் காட்டுவார்களாம். இல்லாவிட்டால் தலைகீழாக நின்றாலும் கூட குழந்தையைக் காட்டவே மாட்டார்களாம்.

பிணம் தின்னும் கழுகுகளை விட கேவலமான இந்தப் பிறவிகளின் அட்டகாசங்களுக்கு என்றுதான் முடிவோ?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+