பெர்முடா ஜெயிக்குமா, இந்தியா பிழைக்குமா??
போர்ட் ஆப் ஸ்பெயின்:பெர்முடா, வங்கதேச அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பையின் கடைசி லீக் போட்டி இன்று நடைபெறுகிறது. இதில் பெர்முடா ஜெயித்தால்இந்தியாவுக்கு சூப்பர் 8 வாய்ப்பு இருப்பதால் இந்திய ரசிகர்கள் பெர்முடா ஜெயிக்குமா, இந்தியா பிழைக்குமா என்ற நப்பாசையில் உள்ளனர்.
உலகக் கோப்பைப் போட்டியின் கடைசி லீக் ஆட்டம் இன்று போர்ட் ஆப் ஸ்பெயினில் நடைபெறுகிறது. வங்கதேசமும், பெர்முடாவும் இதில்மோதுகின்றன.
இந்தப் பிரிவில் இடம் பெற்றுள்ள இலங்கை சூப்பர் 8 சுற்றுக்கு படு சூப்பராக முன்னேறி விட்டது. இந்தியா 2 தோல்விகளுடன் போட்டியிலிருந்துவெளியேற்றப்பட்டுள்ளது. இன்னொரு அணியான வங்கதேசம் 2 புள்ளிகளுடன் உள்ளது. இன்றைய போட்டியில் வங்கதேசம் வெற்றி பெற்றால்சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறி விடும்.
மாறாக பெர்முடா ஜெயித்தால், ரன் ரேட் அடிப்படையில் இந்தியாவுக்கு சூப்பர் 8 சுற்றுக்கு வாய்ப்பு கிடைக்கும். எனவே இன்றைய போட்டியில்பெர்முடா ஜெயிக்குமா என்ற நப்பாசையில் இந்திய ரசிகர்கள் உள்ளனர்.
ஆனால் பெர்முடா ஜெயித்தால் அது உலக அதிசயமாகவே கருதப்படும். காரணம், பெர்முடா, கிரிக்கெட்டுக்கு கற்றுக் குட்டி. உலகக்கோப்பைப்போட்டிக்கு முன்பு நடந்த முத்தரப்பு போட்டித் தொடரில் பெர்முடாவை, வங்கதேசம் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது. எனவேஇன்றைய போட்டியிலும் பெர்முடாவை, வங்கதேசம் கொத்து புரோட்டா போடும் வாய்ப்பே அதிகம்.
இன்றைய போட்டியில் வங்கதேசம் வெற்றி பெற்றால், முதல் முறையாக 2வது சுற்றுக்கு முன்னேறிய பெருமை அந்த அணிக்குக் கிடைக்கும். 1999ம்ஆண்டு உலகக் கோப்பைப் போட்டியில் விளையாட ஆரம்பித்தது வங்கதேசம். இது அந்த அணிக்கு 3வது உலகக் கோப்பைப் போட்டியாகும். கடந்த3 போட்டிகளில் தற்போதுதான் முதல் முறையாக 2வது சுற்றுக்கு அது முன்னேறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications