எதிரிக்கட்சிகளை நசுக்கும் கருணாநிதி: ஜெ

Subscribe to Oneindia Tamil

சென்னை:எதிர்க்கட்சிகளின் குரல் வளையை முறித்து அவர்களை அழித்து ஒழிக்க முயலுகிறார் முதல்வர் கருணாநிதி என அதிமுக பொதுச் செயலாளர்ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், ஜனநாயக நாட்டில், ஆளுங்கட்சியின் குற்றம், குறைகளை சுட்டிக் காட்டுவது எதிர்க்கட்சிகளின்கடமை, உரிமை. அதை விடுத்து ஆளுங்கட்சியினருக்கு ஜால்ரா அடிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகளை அடக்கி, ஒடுக்கி வற்புறுத்த முயல்வது,சர்வாதிகார செயலாகவே கருதப்படும்.

திமுக ஆட்சிக்கு வந்தது முதலே ஜனநாயகத்தின் குரல் வளை நெறிக்கப்பட்டு வருகிறது. காவல்துறையை பயன்படுத்தி அதிமுக தொண்டர்கள் மீதுஅடக்குமுறை ஏவி விடப்பட்டுள்ளது.

கடலூரில் 2 நாட்களுக்கு முன்பு அதிமுக சார்பில் பட்டிமன்றம் நடந்தது. இதில் பேசிய அதிமுக இலக்கிய அணிச் செயலாளர் வைகைச் செல்வன்மற்றும் நான்கு கழக பேச்சாளர்கள் மீது பொய் வழக்குப் பதிவு செய்துள்ளனர் போலீஸார். கருணாநிதிக்கு எதிராக அவர்கள் பேசியதாக கூறிவழக்குப் பதிவு செய்துள்ளனர்.

ஐந்து பேரையும் கைது செய்ய பெரும் போலீஸ் படையே அங்கு வந்துள்ளது. ஆனால் பொதுமக்கள் ஒன்று திரண்டு எதிர்ப்பு தெரிவித்ததால்,போலீஸாரால் அவர்களை கைது செய்ய முடியவில்லை.

ஒரு கட்சியின் இலக்கிய அணிச் செயலாளரையும், கட்சியின் பேச்சாளர்களையும் கைது செய்ய, ஏதோ பயங்கரவாதிகளைப் பிடிக்க வருவது போலபெரும் போலீஸ் படையை அனுப்பியது கடும் கண்டனத்துக்குரியது.

திமுகவில் உள்ள பேச்சாளர்கள் எல்லாம் தரம் தாழ்ந்துதான் எதிர்க்கட்சித் தலைவர்களை விமர்சிக்கின்றனர். எதிர்க்கட்சித் தலைவரை பன்றி என்றுகூறி விமர்சனம் செய்தவர் முதல்வர் கருணாநிதி. அப்படிப் பார்த்தால் முதலில் கருணாநிதியைத்தான் கைது செய்ய வேண்டும்.

எதிர்க்கட்சிகளின் குரல்வளையை முறிக்கும் செயலை முதல்வர் கருணாநிதி நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அது அவருக்கே பாதகமாகமுடியும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+