இன்டர்நெட்-தமிழகத்திற்கு மத்திய அரசு ரூ.75 கோடி

Subscribe to Oneindia Tamil

சென்னை:தமிழக அரசு அலுவலகங்களில் இணைய தள வசதியை ஏற்படுத்த ரூ. 75 கோடி நிதியை அளிக்கவுள்ளதாக முதல்வர் கருணாநிதிக்கு, மத்தியதொலைத்தொடர்பு அமைச்சர் தயாநிதி மாறன் கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தேசிய மின்னியல் ஆளுமைத் திட்டத்தின் கீழ் மத்திய அரசின் தகவல் தொழில்நுட்பத்துறை தமிழ் நாட்டில் மாநிலம் தழுவிய விரிவான இணைய தள வசதிகளை ஏற்டுத்துவதற்காக நிதியுதவி செய்கிறது.

இத்திட்டத்திற்கென மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு ரூ.99.75 கோடி நிதியுதவி செய்து, அதில் ஏற்கனவே ரூ.19 கோடி நிதியுதவி அளித்தது.

அதனை தொடர்ந்து தற்போது தமிழ்நாட்டில் வட்டாசியர் அலுவலகங்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், போக்குவரத்துத் துறை, பதிவுத்துறை,நகராட்சிகள், பேரூராட்சிகள், குடிமைப்பொருட்கள் வழங்கல் துறை ஆகிய துறைகளின் அலுவலகங்களில் இணைய தள வசதிகளை புதிதாகஏற்படுத்துவதற்காக ரூ.75 கோடி நிதியுதவி அளிக்கப்படுகிறது.

இதுதொடர்பாக முதலமைச்சர் கருணாநிதிக்கு எழுதிய கடிதத்தில் மத்திய தொலை தொடர்பு மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் தயாநிதிமாறன் தெரிவித்திருக்கிறார்.

மேலும் வரும் ஏப்ரல் மாதத்தில் சென்னையில் மாநில மின்னியல் தொகுப்பு மையம் ஒன்றை மத்திய அரசு சார்பில் ஏற்படுத்த இருப்பதாகவும் மத்தியஅமைச்சர் தன் கடிதத்தில் தகவல் தெரிவித்துள்ளார் எனக் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+