உலகத் தரமாகும் சென்னை சென்டிரல்
சென்னை:சென்னை சென்டிரல் ரயில் நிலையம் உலகத் தரம் கொண்டதாக மாற்றப்படும் என்று மத்திய ரயில்வே இணை அமைச்சர் ஆர்.வேலு கூறியுள்ளார்.
சென்னை ஐ.சி.எப். ரயில் பெட்டி தொழிற்சாலையில் வெல்டிங் பயிற்சி மையத்திற்கான அடிக்கல்லை மத்திய ரயில்வேதுறை அமைச்சர் ஆர்.வேலுநாட்டினார்.
நிகழ்ச்சியில், அவர் பேசுகையில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் உலகத்தரம் வாய்ந்த ரயில் நிலையமாக மாற்றப்பட்டு பயணிகளுக்கு பல்வேறுவசதிகள் செய்து தரப்படும்.
இது போலவே நாடு முழுவதும் 19 ரயில் நிலையங்கள் உலகத் தரம் வாய்ந்ததாக மாற்ற ரயில்வே திட்டமிட்டுள்ளது. ரயில் நிலையங்களில் வணிகவளாகங்கள் அமைக்கப்பட்டு பல்வேறு வசதிகள் செய்து தரப்படும்.
சென்னையில் பறக்கும் ரயில் திட்டத்தில் மந்தை வெளி-திருவான்மியூர் இடையேயான பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது. சிமெண்ட் இரும்புபோன்ற கட்டுமான பொருட்களில் திடீர் விலை ஏற்றம் இந்த தாமத்துக்கு காரணம், காண்டிராக்டர்கள் பணியை பாதியில் நிறுத்தி வைத்துள்ளனர்.
சென்ட்ரல்-எழும்பூர் ரயில் நிலையங்களை இணைக்கும் திட்டம் குறித்து மாநில அரசுக்கு ஏற்கனவே கடிதம் எழுதி இருக்கிறேன்.
பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலையில் வருடத்திற்கு 1250 பெட்டிகள் தயாரிக்கப்படுகிறது. வரும் ஆண்டில் 1400 பெட்டிகள் தயாரிக்க இலக்குநிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தற்போது இரும்பு உலோரத்தில் ரயில் பெட்டிகள் தயாரிக்கப்படுகிறது. இதை மாற்றி முழுக்க முழுக்க ஸ்டெயின்லஸ் ஸ்டீல் ரயில் பெட்டிகள்தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது இரும்பு பெட்டிகளை விட பலமானது என்றார் வேலு.












Click it and Unblock the Notifications