பட்ஜெட்: வாசமில்லா மலர் இது-விஜயகாந்த்
சென்னை:தமிழக அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட் வாசமில்லா மலர் இது. மணம் இல்லாமல் மலர் மலர்ந்து என்ன பயன் என்று தேமுதிக தலைவர்விஜயகாந்த் கூறியுள்ளார்.
தமிழக பட்ஜெட் குறித்து விஜயகாந்த் வெளியிட்டுள்ள கருத்து:
தமிழக அரசின் பட்ஜெட்டில் மக்கள் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு இல்லை. இந்த நிதி நிலை அறிக்கை ஒரு காகிதப் பூ. அழகுண்டு ஆனால் வாசம்இல்லை. மலர் மலர்ந்து என்ன பயன், மணம் இல்லாவிட்டால் என்கிற திருவள்ளுவரின் கருத்தே இந்த நிதி நிலை அறிக்கைக்குப்பொருத்தமானதாகும்.
சிறு குறு விவசாயிகள் தமிழகத்தில் அதிகம். இவர்கள்தான் அதிக அளவு கடன் வாங்கியுள்ளனர். இவர்களுக்கு அரசு வங்கிகள் மூலமோ, கூட்டுறவுகடன்களோ கிடைப்பது இல்லை.
பள்ளி மாணவர்கள் குறிப்பாக மாணவிகள் படிப்பை பாதியில் நிறுத்தி விடுவது முக்கியப் பிரச்சினையாக உள்ளது. இந்த நிதி நிலை அறிக்கையில்அதுகுறித்து சிறப்புத் திட்டங்கள் எதுவும் இல்லை.
பால் விலை, பஸ் கட்டண உயர்வு, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு ஆகியவற்றால் செலவுகள் கூடியுள்ளதே தவிர மக்களின்வருமானம் கூடவில்லை. அதற்கான வாய்ப்புகளை இந்த பட்ஜெட் ஏற்படுத்தித் தரவில்லை என்று கூறியுள்ளார் விஜயகாந்த்.












Click it and Unblock the Notifications