சன் டிவி கணக்கு என்ன? கேட்கிறார் ஜெ.
சென்னை: சன் டிவி குழுமத்தின் கணக்கு வழக்குகளை பகிரங்கமாக வெளியிட தயாரா என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கேட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
காவிரிப் பிரச்சினை, முல்லைப் பெரியாறு அணை, பாலாறு அணை என அண்டை மாநிலங்களுடனான பிரச்சினையில் தமிழர்களுக்கு விரேதாகமாவும், அந்த மாநிலங்களுக்கு ஆதரவாகவும் கருணாநிதி நடந்து கொள்வதை நான் அவ்வப்போது அறிக்கைகள் மூலம் வெளிப்படுத்தி வருகிறேன்.
கருணாநிதியின் இந்த தமிழர் விரோத நிலைப்பாட்டுக்குக் காரணம் என்னவென்றால் ஆந்திரா, கர்நாடகா, கேரளாவில் அவரது குடும்பத் தொலைக்காட்சிகள் மூலம் கிடைக்கும் அபரிமிதமான வருவாய்தான். இந்தத் தொலைக்காட்சிகள் மூலம் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் வருமானம் அவர்களுக்குக் கிடைக்கிறது.
கர்நாடகத்தில் உதயா, உதயா-2, உதயா மூவிஸ், உஷே, உதயா வார்த்தகங்கள் என ஐந்து டிவிகள் உள்ளன. ஆந்திராவில் ஜெமினி, தேஜா நியூஸ், ஜெமினி மியூசிக், ஜெமினி நியூஸ், ஜிசிவி என ஐந்து சேனல்கள் உள்ளன.
கேரளாவில் சூர்யா, கிரண், சூர்யா மூவிஸ், சூர்யா நியூஸ் என நான்கு சேனல்கள் உள்ளன. இவை தவிர கேபிள் டிவி நிறுவனங்களையும் இங்கு நடத்தி அதிலும் கோடிக்கணக்கான ரூபாய் வருமானம் வருகிறது.
இந்தத் தொலைக்காட்சிகளில் யார் யார் பங்குதாரர்களாக உள்ளனர், குடும்ப உறுப்பினர்களின் பங்கு என்ன, இவற்றிலிருந்து ஒவ்வொருவருக்கும் ஆண்டு வருமானம் எவ்வளவு, ஒவ்ெவாரு டிவிக்கும் ஆண்டு வருவாய் எவ்வளவு என்பதை கருணாநிதியால் தெரிவிக்க முடியுமா?
இதுதவிர, இந்த மூன்று மாநில தொலைக்காட்சிகளிலும் காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு பிரச்சினை குறித்து எத்தனை முறை செய்திகள் வெளியாகின, எந்தெந்த தேதியில் அவை வெளியாகின என்பதை தேதி குறிப்பிட்டுச் சொல்ல முடியுமா?
வருவாயை மனதில் கொண்டு அந்தந்த மாநிலங்களில் தமிழர்களின் வாழ்வாதாரமா இந்த பிரச்சினைகள் குறித்த செய்திகள், அவர்களுளின் வருவாயைப் பாதிக்காத வகையில் ஒளிபரப்பப்படுகின்றன.
சன் குழுமத்தைச் சேர்ந்த மேற்படி சானல்களின் ஆண்டு வருவாய் உள்ளிட்ட கணக்கு வழக்கு விவரங்களை பகிரங்கமாக வெளியிட அவர்கள் தயாரா என்பதை கருணாநிதி விளக்க வேண்டும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications