உப்பிலியப்பனுக்கு ரூ.4 கோடியில் தங்க கவசம்
கும்பகோணம்: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரத்தில் உள்ள உப்பிலியப்பன் கோவில் ெவங்கடாசலபதி சுவாமிக்கு ரூ.4 கோடி மதிப்புள்ள 40 கிலோ தங்கத்தினாலான கவசம் அளிக்கப்பட்டுள்ளது. அறநிலையத்துறை அமைச்சர் பெரியகருப்பன் இதை கோவிலுக்கு வழங்கினார்.
உப்பிலியப்பன் கோவிலில் உள்ள வெங்கடாசலபதி சுவாமிக்கு தங்கக் கவசம் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது. தங்கக் கவசத்தை, மாநில இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்த கோவிலை புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது. அடுத்த வருடத்திற்குள் இப்பணி முடிக்கப்பட்டு மஹாசம்புரோக்ஷனம் செய்யப்படும்.
40 கிலோ எடை கொண்ட, ரூ. 4 கோடி மதிப்பிலான இந்த தங்க கவசத்தை பக்தர் ஒருவர் வழங்கினார். இன்று சுவாமிக்கு அது அணிவிக்கப்பட்டது.
கோவில் நிர்வாக அதிகாரிகள் சுவாமிக்கு வைர கவசம் ஒன்றையும் ெசய்ய முடிவெடுத்துள்ளனர். இதைபோல பூமிதேவி சிலை மற்றும் மார்கண்டேய மஹரிஷி சிலைக்கும் தங்க கவசம் ெசய்யப்படவுள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications