மண்டபம்: விஜய்காந்த் மனைவி மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
டெல்லி:விஜயகாந்த்துக்குச் சொந்தமான கல்யாண மண்டபத்தை மத்திய அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது என்று கூறி விஜயகாந்த்தின் மனைவி பிரேமலதா தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.
சென்னை கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த்தின் ஆண்டாள் அழகர் கல்யாண மண்டபத்தை மேம்பாலம் கட்ட மத்திய நெடுஞ்சாலைத் துறை கையகப்படுத்த முடிவு செய்தது.
இதை எதிர்த்து நிலத்தின் உரிமையாளரான விஜயகாந்த்தின் மனைவி பிரேலதா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், பிரேமலதாவின் மனுவைத் தள்ளுபடி செய்தது. மேலும், 4 வாரங்களுக்குள் நிலத்தை அரசிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.
இதை எதிர்த்து பிரேமலதா சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் பாண்டா, சேமா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது.
பின்னர் இந்த விஷயத்தில் நாங்கள் எதுவும் செய்ய முடியாது. சென்னை உயர்நீதிமன்றத்தைத்தான் மனுதாரர் அணுக வேண்டும் என்று கூறி பிரேமலதாவின் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications