ராணுவத் தாக்குதலில் 8 அப்பாவித் தமிழர்கள் பலி
மட்டக்களப்புமட்டக்களப்பு மாவட்டத்தில் ராணுவம் நடத்திய தாக்குதலில் 9 அப்பாவத் தமிழர்கள் பலியானார்கள். இறந்தவர்களில் 4 பேர் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.
வியாழக்கிழமை இரவு ஏழரை மணியளவில் மட்டக்களப்பு மாவட்டம் முரக்கடன்சேனை எனற பகுதியிலிருந்து, சித்தண்டி என்ற இடத்தை நோக்கி இலங்கை ராணுவம் திடீர் தாக்குதலில் குதித்தது.
அப்பகுதி மக்கள் வசிக்கும் பகுதி என்ற போதிலும், அதைப் பொருட்படுத்தாமல் இலங்கை ராணுவம் பீரங்கித் தாக்குதலில் ஈடுபட்டது. குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தியது.
இதில் நல்லம் தவமணி (30), அவரது 2 வயது மகள் நல்லம் நிரோஜா, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பேரின்பராஜா ரஞ்சிதா (2), பேரின்பராஜா சசிக்குமார் (15), பேரின்பராஜா வசந்தகுமார் (18), அழகய்யா விஜயலட்சுமி (42), நாகமணி தம்பித்துரை (42), இளையதம்பி சின்னத்துரை (50) ஆகியோர் கொல்லப்பட்டனர். காயமைடந்த ஒருவர் மட்டக்களப்பு மருத்துவமனையில் உயிரிழந்தார்.
இந்தத் தாக்குதலின்போது விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து எந்தத் தாக்குதலும் நடைபெறவில்லை என்று கூறப்படுகிறது. தாக்குதலில் 8 வீடுகளும் சேதமடைந்தன.
கண்ணி வெடியில் சிக்கி 5 ராணுவத்தினர் பலி
இதற்கிடையே, வவுனியாவில் விடுதலைப் புலிகளின் கண்ணி வெடியில் சிக்கி ஐந்து ராணுவ வீரர்கள் பலியானார்கள்.
வவுனியா மாவட்டம் பறையன்குளம் என்ற பகுதியில் இன்று பிற்பகல் டிராக்டர் ஒன்றில்ராணுவ வீரர்களுக்கு சாப்பாடு எடுத்துச் செல்லப்பட்டுக் கொண்டிருந்தது
அப்போது சாலையேராம் புதைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணி வெடியில் டிராக்டர் சிக்கி வெடித்தது. இதில் ஐந்து ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். ஒருவர் படுகாயமைடந்தார்.












Click it and Unblock the Notifications