மீனாட்சி அம்மன் கோவில் யானை மரணம்
Subscribe to Oneindia Tamil
மதுரை:மதுரை மீனாட்சி அம்மன் கோவில் யானை அங்கயற்கண்ணி உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தது.
மீனாட்சி அம்மன் கோவிலில் அங்கயற்கண்ணி என்ற 41 வயது யானை இருந்தது. சமீப காலமாக இந்த யானை உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டது.
யானையைக் காக்க கால்நடை மருத்துவர்கள் கடுமையாகப் போராடினர். உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு உயிருக்குப் போராடி வந்த அங்கயற்கண்ணியைப் பார்க்க தினசரி ஏராளமான பக்தர்கள் வந்தவண்ணம் இருந்தனர்.
இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அங்கயற்கண்ணி நேற்று மரணமடைந்தது. இதையடுத்து பக்தர்கள், கோவில் நிர்வாகிகள் யானைக்கு மாலைகள் அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் யானையின் உடல் சித்திரை வீதிகளில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, மதுரை விமான நிலையம் அருகே உள்ள செங்குளம் என்ற இடத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு அடக்கம் செய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications