பந்த்தால் ரத்தான 30 விமானங்கள்
Subscribe to Oneindia Tamil
சென்னை:தமிழகத்தில் நேற்று நடந்த பந்த் காரணமாக சென்னை விமான நிலையத்தில் 30 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன
நேற்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை விமானங்கள் சரிவர இயக்கப்படவில்லை. இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் 14 விமானங்களையும், பாரமவுண்ட் எக்ஸ்பிரஸ் 16 விமானங்களையும் ரத்து செய்து விட்டன.
இருப்பினும் பிற விமான நிறுவனங்கள் விமான சேவையை நடத்தின. ஆனால் அவற்றில் பயணிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்தது.
சில விமானங்கள் நேற்று காலை தாமதமாக வந்ததால் 6 மணிக்கு மேல் வந்த பயணிகள் தங்களது இருப்பிடங்களுக்குச் செல்ல முடியவில்லை. இதனால் அவர்கள் மாலை வரை விமான நிலையத்திலேயே தங்கியிருந்து மாலையில் கிளம்பிச் சென்றனர்.












Click it and Unblock the Notifications