பெரியாறு: பொய் சொல்லும் கேரளா-கருணாநிதி
சென்னை:முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்ட மத்திய நிபுணர் குழு ஒப்புதல் அளித்து விட்டதாக கேரள முதல்வர் அச்சுதானந்தன் கூறியிருப்பது தவறு, பொய் என்று கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசு நியமித்த நிபுணர் குழு, முல்லைப் பெரியாறு அணை பலமாக உள்ளது. இங்கு 142 அடி வரை தண்ணீரைத் தேக்கி வைக்கலாம் என்று மட்டுமே கூறியுள்ளது. புதிய அணை கட்ட வேண்டும் என நிபுணர் குழு அறிக்கையில் எங்குமே கூறப்படவில்லை.
ஆனால் இதற்கு மாறாக, நிபுணர் குழு அறிக்கையில், புதிய அணை கட்ட பரிந்துரைத்துள்ளதாக கேரள முதல்வர் கூறியிருப்பது தவறானது, பொய்யான தகவல்.
மேலும், டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்த அச்சுதானந்தன், பின்னர் செய்தியாளர்களிடம் புதிய அணை கட்டும் முடிவுக்கு தமிழக அரசும், கேரள அரசும் ஒப்புக் கொண்டுள்ளதாகவும் கூறியுள்ளார். இதுவும் மிக மிக தவறான தகவல். உண்மைக்குப் புறம்பாக பேசியுள்ளார் அச்சுதானந்தன்.
புதிய அணை கட்டுவதற்கு நிதியுதவி தருமாறு பிரதமரிடம் கேரள முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால் அந்தக் கோரிக்கையை பிரதமர் ஏற்கவில்லை என்று எனக்கு செய்தி வந்துள்ளது என்று கூறியுள்ளார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications