தீவிர போரில் குதிக்க ராஜபக் ஷே முடிவு:ரத்தாகிறது போர் நிறுத்தம்-மக்களிடம் கருத்துக்கணிப்பு
கொழும்பு:நார்வே மத்தியஸ்தத்தில் உருவான போர் நிறுத்த ஒப்பந்தத்தை முழுமையாக ரத்து செய்து விட்டு, விடுதலைப் புலிகளுக்கு எதிராக தீவிரப் போரில் குதிக்கு இலங்கை அதிபர் ராஜபக்க்ஷே முடிவு செய்துள்ளார். போர் நிறுத்த ஒப்பந்தத்தை முழுமையாக ரத்து செய்வது தொடர்பாக நாடு தழுவிய அளவில் கருத்துக் கணிப்பு நடத்தவும் அவர் திட்டமிட்டுள்ளார்.
கடந்த 2002ம் ஆண்டு நார்வே குழுவின் உதவியுடன், இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே அமைதி உடன்பாடு ஏற்பட்டது. ராஜபக்ஷே அதிபர் பதவிக்கு வந்தது முதல் விடுதலைப் புலிகள் மீதான நடவடிக்கையை மிகத் தீவிரமாக்கினார்.
சமீபத்தில் போர் நிறுத்த ஒப்பந்தம் காலாவதியானது. இருப்பினும் விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை படையினருக்கும் இடையே முழு அளவிலான போர் வெடிக்கவில்லை. அதேசமயம், இரு தரப்பும் கடுமையாக மோதி வருகின்றன.
இந்த நிலையில் சமீபத்தில் விடுதலைப் புலிகள் நடத்திய விமானத் தாக்குதல், இலங்கை அரசை பெரும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. இதனால் தமிழர் பகுதிகளில் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.
இதற்கிடையே, விடுதலைப் புலிகளுடனான தாக்குதலை மேலும் தீவிரப்படுத்த வசதியாக, அமைதி ஒப்பந்தத்தை முழுமையாக கைவிட இலங்கை அரசு திட்டமிட்டுள்ளது.
இதுதொடர்பாக பொது கருத்துக் கணிப்பு நடத்தி தீர்மானிக்க அவர் முடிவு செய்துள்ளோர். அதிபரின் இந்த முடிவுக்கு பல கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. குறிப்பாக முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவின் ஐக்கிய தேசியக் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இலங்கையில் போர் நிறுத்த ஒப்பந்தம் முழுமையாக கைவிடப்பட்டால், பெரிய அளவிலான போர் வெடிக்கும், அது மிகப் பெரிய பேரழிவுக்கு வித்திடும், இலங்கையில் ரத்த ஆறு ஓடும் என விடுதலைப் புலிகள் அமைப்பு எச்சரித்துள்ளது.
-
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை -
கருணாஸ் பாஜகவுக்கு விட்ட சவால்.. "இந்து மதமே கிடையாது" அதிர்ச்சியில் உறைந்த இந்து முன்னணி! -
நாலாபக்கமும் நெருக்கடி.. பாஜக கூட்டணிக்கு வருகிறாரா விஜய்? நயினார் நாகேந்திரனே கொடுத்த பதில் -
பாஜக கூட்டணி வர்றீங்களா? இல்ல கடையை சாத்துறீங்களா? விஜய்க்கு டெல்லி டெட்லைன்.. சிபிஐ பிடியில் தவெக! -
விஜய்க்கு இரட்டை அதிர்ச்சி.. சினிமா, அரசியல் இரண்டிலும் ஒரே நாளில் விழுந்த பேரிடி












Click it and Unblock the Notifications