மீனவர்கள் சாவு: குமரி மாவட்டத்தில் பந்த்பஸ், ஆட்டோ ஓடவில்லை-கடைகள் அடைப்பு
நாகர்கோவில்:இலங்கை கடற்படையால் குமரி மாவட்ட மீனவர்கள் 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று முழு அடைப்புப் பேராாட்டம் நடந்தது. இதனால் மாவட்டத்தில் இயல்பு நிலை முடங்கிப் போனது.
சமீபத்தில் குமரி மாவட்டம் சின்னத்துரை கிராமத்தைச் சேர்ந்த ஐந்து மீனவர்கள் நடுக்கடலில் இலங்கை கடற்படையால் சுட்டுக் ெகால்லப்பட்டனர். இதனால் குமரி மாவட்ட மீனவர்கள் கொந்தளித்தனர்.
பல்வேறு கட்சிகளின் ஆதரவுடன் இன்று குமரி மாவட்டத்தில் ஒரு நாள் பந்த் நடத்த முடிவு செய்யப்பட்டது. திமுக, மதிமுக, பாமக உள்ளிட்ட பல்ேவறு கட்சிகளும் இந்த பந்த் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. மேலும், வணிகர் சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் ஆதரவு ெதரிவித்தன.
அதன்படி இன்று காைல 6 மணிக்கு பந்த் தொடங்கியது. குமரி மாவட்டம் முழுவதும் பஸ்கள், லாரிகள் ஓடவில்லை. ஆட்ேடாக்கள், டாக்சிகளும் ஓடவில்லை.
வணிக நிறுவனங்களும் மூடப்பட்டன. கடைகளும் அடைக்கப்பட்டன. பெரும்பாலான கல்வி நிறுவனங்களும் இயங்கவில்லை.
பந்த்தையொட்டி குமரி மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications