இட ஒதுக்கீடுக்கு ஆதரவாக ஆந்திராவில் பந்த்
ஹைதராபாத்:பிற்பட்ட வகுப்பினருக்கு மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்க உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளதை எதிர்த்து ஆந்திராவில் இன்று முழு அடைப்பு நடந்து வருகிறது. இதனால் அங்கு இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது.
உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து தமிழகத்தில் ஒரு நாள் முழு அடைப்புப் போராட்டம் நடந்தது. மக்களின் பேராதரவுடன் இந்தப் ேபாராட்டம் முழு வெற்றி அடைந்தது.
இந்த நிலையில் ஆந்திராவில் இன்று பந்த் நடத்தப்படுகிறது. காலை 6 மணிக்குத் தொடங்கிய பந்த்தால், அங்கு இயல்பு வாழ்க்கை அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது.
கடைகள், வர்த்தக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன. பேருந்து, லாரி, ஆட்டோ, டாக்ஸி போக்குவரத்தும் அடியோடு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பந்த் காரணமாக சட்டசைபயும் இன்று முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பந்த் காரணமாக, தமிழகத்திலிருந்து சென்ற பேருந்துகள், கிருஷ்ணகிரி அருகே எல்லைப் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளன. இதேபோல திருத்தணி, ஓசூர் ஆகிய பகுதிகளிலிருந்து ஆந்திராவுக்கு செல்லும் பேருந்துப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications