விஜயகாந்த்திடம் ஆட்சியை ஒப்படையுங்கள்-பண்ருட்டி

Subscribe to Oneindia Tamil

விருத்தாசலம்:தமிழகத்தின் எதிர்காலம் தேமுதிகதான். எனவே மக்கள் அவரிடம் ஆட்சியை ஒப்படைக்க வேண்டும் என்று தேமுதிக அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் கூறியுள்ளார்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வானொலி திடலில் தமிழக அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்தும், விலைவாசி உயர்வை கண்டித்தும் தேமுதிக சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது.

இதில் கலந்து கொண்டு பண்ருட்டி ராமச்சந்திரன் பேசுகையில்,

எம்ஜிஆருக்கு அடுத்து ஏழைகளுக்கு தனது சொந்த பணத்தை செலவிட்டு நன்மை செய்வது விஜயகாந்த் மட்டும்தான்.

தமிழகத்திலேயே ஜாதி மற்றும் தேர்தல் கூட்டணி இல்லாமல் அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் விஜயகாந்த் மட்டுமே.

தமிழ்நாட்டில் விலைவாசி உயர்வால் வறுமையின் காரணமாக மக்கள் சிறுநீரகத்தை விற்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. திட்டம் போட தெரிந்தவர்களுக்கு விலைவாசியை கட்டுப்படுத்த முடியவில்லை.

தமிழ்நாட்டின் எதிர்காலமாக இருக்கப்போவது தேமுதிக தான். அதனால் மக்கள் ஆட்சியை விஜயகாந்திடம் ஒப்படைக்க வேண்டும் என்றார் பண்ருட்டி ராமச்சந்திரன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+