மன்மோகன் சிங்,சௌகத் அஜீஸ் சந்திப்பு
டெல்லி:ஜம்மு காஷ்மீர் பிரச்சினை மற்றும் தீவிரவாதப் பிரச்சினை குறித்து இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கை, பாகிஸ்தான் பிரதமர் செளகத் அஜீஸ் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
டெல்லியில் நடைபெறும் 14வது சார்க் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள வந்த பாகிஸ்தான் பிரதமர் சௌகத் அஜீஸ் இன்று பிரதமர் மன்மோகன் சிங்கை, சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்பின் போது இரு நாடுகளுக்கிடையேயான அமைதிப் பேச்சுவார்த்தையை தொடருவது குறித்தும் சியாச்சின் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் குறித்தும் இரு தலைவர்களும் விவாதித்தனர்.
காஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு காணாமல் தெற்காசியாவில் அமைதியோ வளர்ச்சியோ ஏற்பட வாய்ப்பில்லை என்று அப்போது பிரதமரிடம், பாகிஸ்தான் பிரதமர் தெரிவித்தார்.
மேலும் காஷ்மீர் பிரச்சனைக்கு முடிவு கண்டு காஷ்மீர் மக்களுக்கு அமைதியான வாழ்வை ஏற்படுத்தி தரவும் இதுதான் சரியான தருணம் என்றும் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications